chennireporters.com

கன்னட திரைப்பட உலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்.

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித்.

“பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர தேசிய விருதைப் பெற்றார் புனித். பின்னர் புரி ஜெகன்நாத் இயக்கிய அப்பு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் புனித்.இந்த படம் தமிழில் “தம்” என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த செய்தி கர்நாடக ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்று 7:30 மணிக்கு தனது சகோதரரும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான பஜ்ரங்கி 2 படம் குறித்து தனது வாழ்த்துக்களை புனித் ராஜ்குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

கன்னட ரசிகர்கள் புனித் ராஜ்குமார் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி பெங்களூர் மைசூர் போன்ற பெருநகரங்களில் மீண்டும் எழுந்து வா புனித் என்று கண்ணீர் மல்க தனது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். video credit tv9 kannada

கன்னட திரைப்பட உலகத்தில் பெரும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக திரைப்பட நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் வரும் இரண்டாம் தேதி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க.!