பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களை அழித்திடலாம்; உண்மையை ஒருபோதும் அழித்திட முடியாது ! நான்கு திசைகளில் இருந்தும் அறிய ப்படும் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதே செய்தியாகும். அது நடுநிலைமையான உண்மையை உயிரோட்டமாக கொண்டிருக்க வேண்டும்.
அத்தகைய உண்மையை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. போர்க்களத்தில் கொல்லப்படும் எதிரிகளை விட, சமாதான காலத்தின் தூதர்களான ஊடக பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.
கருத்து சுதந்திரத்தை , பத்திரிகை சுதந்திரத்தை வெளிப்படுத்தி வரும் பத்திரிக்கை ஊடகவியலாளர்களை பாதுகாத்திடுவதில், கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் . மனித உரிமை பாதுகாப்பு என்பதும், பத்திரி கையாளர்கள் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.
கருத்து சுதந்திரத்துடன் உண்மைகளை எடுத்துரைத்திடும் வகையில், எந்தவித இடையூறுகளும் இன்றி , ஊடக பத்திரிகையாளர்கள் செயல் படுத்துவதற்கான பணிச் சூழலை அனைத்து நாடுகளும் அரசுகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை, உயிர் வாழும் உத்தரவாதத்தை, உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே நேரத் தில், உண்மை வெளிப்பாடுடன் கூடிய இதழியல் தொழில் தர்மங்களை கடை பிடித்தக்க சூழலை உருவாக்கித் தர வேண்டியதும் ஆட்சியாளர்களின் கடமையாகும்.
இதுவரை நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம்; ஆனாலும் உண்மையை வெளிப்படுத்திநிற்கும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளை ஒருபோதும் அழித்து ஒழித்திட முடியாது என்பதே இந்த பத்திரிகை சுதந்திரநாளின் அறைகூவலாக இருக்கும்.
” பாரிடை துயில்வோர்
எழுச்சிபெற்றிட,
செறிதரும் மக்கள்
எண்ணம் செழித்திட,
ஊரினை உயர்த்தி
உலகினை ஒன்றுபடுத்திட,
பேரறிவாளர் நெஞ்சில்
உருவாய் வளர்ந்திட்ட பத்திரிகைகள்”
நாள்தோறும் ஏற்றம் பெற்றிட வேண்டும் ; அதற்கான சுதந்திர நெறிமுறைகளை கடைப்பிடித்திட வாய்ப்பளித்திட வேண்டியதும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் இவைகளின் கருத்து சுதந்திரம், பத்தி ரிக்கை சுதந்திரம், பத்திரிகையாளர் சுதந்தரம்,பாதுகாக்கப்பட வேண்டியதும், அனைத்து தரப்பாரின் அத்தியா வசியக் கடமையாகும். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்து நிற்கும் நாளைய விடியல் நமக்கானதாக இருக்கட்டும் ! இதழாளர் இசைக்கும்மணி