chennireporters.com

ராஜீவ் கொலையாளிகளுக்கு பரோல் வழங்குவதில் பாரபட்சம்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்த விவரம் வருமாறு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும் உள்துறை செயலாளருக்கும் சிறைத் துறை மூலம் கடந்த 26ம் தேதி கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் அவர்களுக்கு பரோல் வழங்க சிறைத் துறை சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தது இந்நிலையில் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல் துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அதில் சென்னையில் உள்ள தனது தாய் பத்மா வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் அவரை கவனித்துக் கொள்ளவும் இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால்,அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கும் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நளினிக்கும் முருகனுக்கும் பரோல் வழங்கப்பட்டால் அவர்கள் எங்கு தங்குவார்கள்?அவர்களுக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?என்பது குறித்து வேலூர் மாவட்ட காவல்துறை சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டிருந்தது.

அப்படியிருக்க கொரோனா அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் பெரும்பாலான கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் இருப்பதால்,நளினி முருகனுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது.

அதனால் தற்போதைக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மறுப்பு தெரிவித்துள்ளது வேலூர் மாவட்ட காவல்துறை ஏற்கனவே நளினி தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று காரணம் சொல்லி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு மாதம் பரோலில் வந்தார்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் தங்கியிருந்த அவர்,திருமணத்துக்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில்தான் தற்போது அவரது மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதே வழக்கில் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு மட்டும் கேட்கும் போதெல்லாம் பரோல் கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்போது பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நளினி மற்றும் முருகனுக்கு பரோல் வழங்குவதில் பாராபட்சம் காட்டுவதாக நளினி தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க.!