ரேஷன் கார்டு வேண்டுமா மூன்று ஆயிரம் கட்டிங் கொடுத்தால் உடனடியாக கிடைக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரி சுகுமார் என்பவர் தனது புரோக்கர்களை வைத்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
மணலி, மாத்தூர், மாதாவரம், சின்ன சேக்காடு, பெரிய சேக்காடு, கொசப்பூர், பெரிய மாத்தூர், ஆண்டாள் குப்பம், சடையான் குப்பம், மணலிபுதுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 34 ரேஷன் கடைகளில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க பட்டவர்களின் முகவரிகளை சில புரோக்கர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக ரேஷன் கார்டு வேண்டுமென்றால் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து மூன்றாயிரம் ரூபாய் வரை லஞ்சமாக கேட்கிறார்கள்.
அப்படி கொடுப்பவர்கள் பட்டியலை தனியாக தயார் செய்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி சுகுமாரிடம் கொடுத்து முதல் பட்டியலில் சேர்க்கப்பட்டு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அப்படி பணம் வழங்க முடியாதவர்களின் பெயர் பட்டியலை கிடப்பில் போட்டு விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றார் மணலி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர்.
சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள் எங்கள் முகவரியை கேட்டு நீங்கள் தான் வீட்டின் உரிமையாளர்களா என்று கேட்டனர். ஆமாம் என்று சொன்னேன். புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்திருக்கிறீர்களா என்றார்கள் ஆமாம் என்று சொன்னவுடன் உடனடியாக கார்டு வேண்டுமென்றால் 3000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் சரி கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டேன் முடியாது என்று மறுத்து விட்டனர். இதுவரை என்னுடைய விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
ஃபீல்டு வெரிஃபிகேஷன் ஆபிஸராக கடந்த மூன்று வருடமாக சுகுமார் இதே பகுதியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு யூனியனில் செல்வாக்கு உள்ளவர். தலைவர்கள்பலர் பக்கபலமாக இருப்பதால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ன குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ரேஷன் கார்டு தருவதற்கு அரசு எந்தவித பணமும் வாங்காத போது இவர் தனது புரோக்கர்களை வைத்து பணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகில் உள்ள உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் தினந்தோறும் இவருடைய புரோக்கர்கள் ராஜேஷ், சார்லஸ் கோபி, முனுசாமி ஆகியோர் 3 பேரும் சுமார் மாலை 7 மணி அளவில் அதிகாரி சுகுமாரை சந்தித்து தாங்கள் வசூலித்த லஞ்சப் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு செல்கின்றனர். அவர் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கொஞ்சம் கமிஷனையும் கொடுத்து அனுப்புவார்.
இது குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கே பல புகார் கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல துணை ஆணையர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கருணாகரனிடமும் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.
எனவே அரசுக்கு அவப்பேரை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரி சுகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்கின்றனர் அதிமுகவினர். இனிமேலாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரி சுகுமார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட சுகுமார் அவர்கள் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.