chennireporters.com

மார்வாடிகளின் பிடியில் மாம்பழம் நகரம் சவுக்கார் பேட்டை போல் தனி ராஜ்ஜியமாகும் சேலம் ஒரு பகீர் ரிப்போர்ட்.

பெரிய செய்தி சிறப்பு செய்தி.

இனி சேலம் நகரம் வட நாட்டவரின் ராஜ்ஜியமாக திகழும் சென்னை சௌகார்பேட்டை போல் உருவாகப் போகிறது.சேலம் எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?!

கலெக்டராக ரோகினி என்பவர் அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது யார்?! சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்காமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டு வந்தது யார்?!

புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?!பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?!இஸ்லாமியர் நாய்க்கறி போடுவதாக வதந்தி தீயை கொளுத்திப் போட்டது யார்?!விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்…

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியேறினர்.

மிகச் குறைந்த எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் படிப்படியாக சேலத்தை முழுவதுமாக ஆக்ரமித்து முக்கிய இடங்களை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டனர்.

நம்பமுடியவில்லை யா?!ஆனால் இதுதான் உண்மை.ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக இங்குள்ள எருமா இடம் தொடங்கி பாளையம் பழைப்பேருந்து நிலையம்,

செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு வரை பல இடங்களில் வீடுகளையும், கடைகளையும் வாங்கி குவித்து விட்டனர் அந்த பகுதிகள் அனைத்தும் தான் இன்று தற்போதைய சேலத்தின் இதயம்.

அந்த இதயத்தில் தான் தற்போது பனியாக்கள் எனப்படும் வடநாட்டவர் அதிகமானோர் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன்

விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் “ஜெயின் தெரு” என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இந்த வடநாட்டவர்கள் ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?!

காரணம் இதுதான் இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது. சேலத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைந்திருக்கும் கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா இன முதலாளிகளின் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இங்குள்ள இவர்களின் கம்பெனிகள், பல ஆண்டுகளாக தங்களது தொழிலை பெருக்க கொஞ்சம் கொஞ்சமாக காய்நகர்த்தி வருகின்றன.அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றவைகள் கருதப்படுகின்றன.

இவர்களுக்கு ஒத்து ஊதுவதற்காக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம் என்கிறார்கள் சேலம் நகர முதலாளிகள்.இதை எப்படி செய்கிறார்கள்?!பொதுவாக வட இந்திய வணிக சமூகமான பனியா இனத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.

மார்வாடி மற்றும் ஜெயின். அதாவதுஅம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் அனைவரும் பனியா இனம் சார்ந்த சமூகமே.
இவர்கள்தான் தற்போதைய மத்திய அரசை கையில் அடக்கி இயக்குவது என்பது அனைவரும் அறிந்ததே

இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் வெவ்வேறான மதக் கோட்பாடுகளை பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை முக்கியமாக ஆதரிப்பவர்கள்.

காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு முந்தைய காங்கிரசை விட பாதுகாப்பாக தற்போதைய பாஜக ஆட்சி அன்பு காட்டி அரவணைத்து செல்கிறது.

ஆனால் நடைமுறை இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை என்றே கூறப்படுகிறதுஅவர்கள் தெருக்களில் இவர்கள் இணைந்து வசிப்பது இல்லை, இவர்களிடம் அவர்கள் ஒட்டி உறவாடும் இல்லை.

என்றாலும் இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால், இந்தி பேசும் பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக ஒரு கருத்து உண்டு கஞ்சத்தனம் செய்பவர்கள்சொத்துக்களை சேர்த்துக்கொண்டே போவார்கள்.ஆனால் அதை வைத்து அனுபவிக்க மாட்டார்கள் என்பதுதான்.

இவர்களுக்குள் முரண்கள் பல இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடுடாக கட்டி வசிக்கத் தொடங்கி விடுவார்கள்.

அவ்வாறு இவர்கள் கட்டும் வீடுகளுக்கு அருகிலேயே ஒரு கொட்டகை அமைத்து பீஹாரிகளை தங்க வைத்து அவர்களை வேலையாட்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நிலம், நீர், மின்சாரம் என அனைத்தையும் இந்த அதிகாரிகள் மூலம் சுரண்டுகிறார்கள் குறிப்பாக மார்வாடிகள் கட்டும் வீடுகள் காலியாக இருந்தாலும் தமிழர்களை வாடகைக்கு கூட தங்க விடுவதில்லை.

இதன் உச்சகட்டமாக எருமாபாளையத்தில் உள்ள ஒரு ஏரியில் ஒரு பெரிய ஜெயின் கோவில் கட்டப்பட்டது.சேலத்தின் பிரபல சமூக சேவகர் என்று நாம் கொண்டாடும் பியூஸ் மனுஸ் தான் இந்த கோவில் கட்டுவதற்கு பக்கபலமாக இருந்துள்ளார்.

இங்கு தமிழர்கள் நுழைய அனுமதி இல்லை என்பது கூடுதல் செய்தி.இது மட்டுமின்றி, தாங்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்திலும் சமணக் கோயில்களை கட்டி முடித்துள்ளனர்.

ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுப் பாதையை அடைத்து தனித் தீவாக ஆக்குகிறார்கள்.புகையிலை மற்றும் புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை குடோன்களில் மூடை மூடையாக பதுக்கி வைக்கின்றனர்.

இவர்களே இந்த பொருட்களை தடை செய்வதற்கான வழிவகைகள் செய்துவிட்டு மக்களை போதைக்கு அடிமையாகி விட்ட நிலையில் அவர்கள் இவர்களை மறைமுகமாக சந்தித்து வாங்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றனர் அப்போதுதான் அவர்கள் இந்த பொருட்களை விலை ஏற்றி விற்க முடியும் என்பதால்.

இது தவிர, வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி நகைக்கடை அல்லது அடகு கடை நடத்துவது பல தலைமுறைகளாக இருந்து வரும் உத்தி (படத்தில் கூட அயன் காட்டியிருப்பார்).

காலங்காலமாக இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருவதால் பணம் அவர்களுடன் விளையாடுகிறது.

சேலத்தில் விற்பனை செய்யப்படும் கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி வியாபாரம், பான்பராக், புகையிலை, எலக்ட்ரானிக்ஸ், கைவினைப் பொருட்கள் மற்றும்

காலணிகள் உட்பட அனைத்து முக்கியப் பொருட்களையும் தங்கள் பண பலத்தால் இந்த மார்வாடி கும்பல் விற்பனையை கைப்பற்றியுள்ளனது.

மார்வாடி மொழியில் “மார்வாடியோ ஜினோ” தமிழில் “மார்வாடிகள் வாழவேண்டும்” என்ற முழக்க கொள்கையோடு இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களாக்கள் வரை தயாரிப்பு முதல் விற்பனை வரை அனைத்தையும் இவர்கள் தான் செய்கிறார்கள்.

பீகார் ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசப் மாநில பகுதியிலிருந்து 15 வயதுக்குட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, சேலம் சுற்றுப்புற பகுதி முழுவதும் அதன் தொடர்புடைய வேலைகளுக்காக அமர்த்தப்பட்டு நிரப்பப்பட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த இவர்கள் அனைவரும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையையும், மூன்று மாதங்களுக்குள் ரேஷன் அட்டையையும் தேடுகிறார்கள்.

அதற்கான ஏற்பாடுகளை இவர்களுக்கு செய்து கவனிக்க ஒரு ஆக்டோபஸின் மூளை போன்று சென்னை செளகார்பேட்டை ஒரு தளமாக அமைந்துள்ளது.

இங்கு மார்வாடி கார்களுக்கு என பத்திரிகை, பணம், சங்கம், வழக்கறிஞர்கள், கட்சிப் பதவி, அரசு அதிகாரிகள், மதுபான சரக்கு என அனைத்து முன்னேற்பாடுகளுடன் உதவி செய்யும் அமைப்புகள் உள்ளன.

இந்த ஆக்டோபஸ் சென்னையிலிருந்து தமிழக இதயப் பகுதி சேலத்தை தொட்டு கோயம்புத்தூர் வரை தனது கால்களை விரித்து தமிழர்களின் ரத்தத்தை உறிஞ்சி வியாபாரத்தையும் தொழிலையும் நசுக்கி வருகிறது.

இந்த மார்வாடி ஜந்துக்களின் அடுத்த இலக்கு மைய நகரமான மதுரை.
தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் முக்கால்வாசி ஜெயின்-மார்வாரிகளுக்கு சொந்தமானவை என்பது அனைவருக்கும் அறிந்ததே.

மதுரையின் இரண்டு தேர்தல் வார்டுகளில் வெறும் ஐந்தே ஆண்டுகளில் பீஹாரிகள் புற்றீசலை போல் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக மாறி உள்ளனர். தவிர அடுத்த இலக்காக திருநெல்வேலி யையும் விட்டுவைக்காமல்

புகுந்து விட்டனர் ஏற்கனவே இங்கு கால்பகுதி வியாபாரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் அவர்கள் நுழைந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பது ஒரு பகீர் செய்தி.

தமிழ்நாடு முழுவதும் இந்த வட நாட்டு சமூகத்தினர் களுக்கு வியாபாரப் போட்டியாக கவுண்டர்கள், நாடார்கள் மற்றும் தெலுங்கர்கள் மட்டுமே உள்ளனர்.

ரியல் எஸ்டேட் தொழிலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர்களும் தற்போது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்து அமைப்புகளில் சேரத் தொடங்கியுள்ளனர். சமீபத்திய தேர்தல்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பு சார்பாக இந்த இன மக்கள் வேட்பாளராக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

முதலில் குடியேற்றம்பின்பு கள்ளநோட்டு,நில ஆக்கிரமிப்பு,பிறகு வியாபார சந்தையை கைப்பற்றுதல் கோயில்கள் மூலமாக நிலத்தைத் கையகப்படுத்த தங்கள்

இன மக்களை ஒன்றி ணைப்பதற்காககட்டிய கோயில்களை வைத்து நிதி வசூல் செய்வது இப்படியாக இவர்கள் சமூகம் இங்கே கால் பதித்து வளர்ந்து வருகிறது.

தேசிய அல்லது மத அரசியல் மற்றும் அந்த நிதி மூலம் இன மொழி வரையறைக்குள் வராத விளம்பரம்,இதனால் வரும் பிரச்சனைகளை மேற்பார்வையிடவும், பணியா கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணிக்கும் செயல்பாடுகளை கண்காணிக்கவும்,

புலம்பெயர்ந்தோர் வாக்குரிமை, தேர்தல் பணி, நிதி மற்றும் பெருநிறுவன ஆதரவு போன்ற மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் வலுவான அரசியலை இந்தியா முழுவதும் மார்வாடி மற்றும் ஜெயின் அமைப்பினர் கட்டமைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழகத்தில் களம் இறங்கி அதில் பாதி வெற்றியையும் கண்டு விட்டனர் என்பது நிதர்சன உண்மை.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜெயின் செயல்முறைகள் இப்போது தமிழகத்தின் அனைத்து புதிய நகரங்களிலும் நடைபெறுவது அவர்களின் அதிகாரத்தின் நீட்சியாகும். இதற்கு அண்மைக் காலங்களில் தினசரிகளில் வரும் செய்திகளே சான்றாகும்.

பணியா முதலாளிகளின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;ஒவ்வொரு நகரத்திலும் உள்ளூர் வியாபாரிகள் இருக்கிறார்கள்.

இந்த வியாபாரிகளையும் அவர்களின் சந்தைகளையும் கைப்பற்றினால் நிலத்தையும் அரசியலையும் எளிதாக கைப்பற்ற முடியும் என்பதே இவர்களின் முக்கிய திட்டம் மற்றும் குறிக்கோளாக உள்ளது.

இனியும் தமிழகத்தில் இந்த வடநாட்டவர்களோடு இணைந்த பணியா முதலாளி முதலைகளை வளரவிட்டால் அடுத்த பத்து வருடத்தில் இவர்கள் சொல்வது தான் சட்டம் என்கின்ற அபாய சூழலும் இங்கே ஏற்பட்டுவிடும்.

உறவுகளை நம்புங்கள்…………தமிழகம் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நாம் நமது உரிமைகளை இழக்கிறோம்…மேற்கண்ட 👆🏻 படித்ததில் பிடித்தது செய்தியினை சிறிது மறுவடிவம் செய்து கொடுத்துள்ளேன். என்றாலும் எனக்குள் ஒரு சந்தேகம் இதில் எழுகிறது.

உலகமே எதிர்க்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா ஆதரவுடன் பல எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிறுவியது.

இதன் செயல்பாட்டில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமே அழியும் என்ற பேராபத்து கருத்தும் நிலவுகிறது மத்திய எதைச் செய்தாலும் அதற்கு ஆதரவளித்து வரும் பணியா மக்கள்.

இங்கே குடிபெயர்ந்து வளர்வதை அரசு அறிந்தும் வேடிக்கை பார்க்கிறதா ?அல்லது இந்த பேராபத்தை அறிந்தும் மத்திய அரசு மீதுள்ள கண்மூடித்தன நம்பிக்கையால் இவர்கள் மென்மேலும் குடிபெயர்ந்து வருகிறார்களா ?

அனு உலைகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து இல்லை என்ற தனது கருத்தை நிலைநிறுத்த தனது இன மக்களையே பலிகடாக்க மத்திய அரசு மறைமுகமாக திட்டமிட்டு செயல் படுகிறதா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

சை. சையத் ரிஸ்வான். நெல்லை

இதையும் படிங்க.!