சவுக்கு அலுவலகத்தில் இருந்த கஞ்சா சங்கர் தேனியில் போடப்பட்டிருந்த கஞ்சா வழக்கில் சங்கரை தேனி மாவட்ட போலிசார் நேற்று திடீரென தட்டி தூக்கி வேனில் ஏற்றினார்கள். பின்னர் தான் நீதிமன்றத்தில் ஆஜராகமல் ஏமாற்றி வந்ததால் தான் கைது செய்யப்பட்டுள்ளோம் என்ற செய்தியை தெரிந்து கொண்டாராம்.
கடந்த மே மாதம் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது அவரது கார் மற்றும் உதவியாளரிடம் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராம் பிரபு, ராஜரத்தினம், மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. ஆஜராகாததற்கான காரணம் குறித்து அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்க மறுத்ததோடு சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து தேனி மாவட்ட போலீசார் நேற்று மீண்டும் கைது செய்துள்ளனர். கஞ்சா வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கஞ்சாவடிக்கை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போக்கு காட்டி வந்த சவுக்கு சங்கர் அவரது அலுவலகத்திலேயே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
தான் இன்றைக்கு கைது செய்யப் போகிறோம் என்கிற செய்தியை சவுக்கு சங்கரின் காக்கி ஜால்ராக்கள் யாரும் அவருக்கு தகவல் சொல்லாததால் பெரும் மூடு அப்செட்டில் இருக்கிறாராம் சவுக்கு சங்கர்.
ஜெயிலுக்குச் சென்று கலி சாப்பிட்ட பிறகும் அறிவு வராத சவுக்கு சங்கர் மீண்டும் முதல்வர் குறித்தும், முதலமைச்சரின் குடும்பத்தை குறித்தும் சமூக வலைத்தளத்திலும் பொதுவெளிலும் தொடர்ந்து பேசி வருவது அவரது தான்தோன்றித்தனத்தையும் ஆணவப் போக்கையும் காட்டுகிறது என்கின்றனர் சில திமுக வழக்கறிஞர்கள். எடப்பாடி இடம் வாங்கிய காசுக்கு சத்தம் போட்டு கூவுகிறது சங்கர் என்னும் கஞ்சா சங்கர் என்கிறார்கள் திமுகவினர்.