chennireporters.com

#senthil balaji’s younger brother ashok appearing in court ; தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் நீதிமன்றத்தில் ஆஜர். வழக்கில் புதிய திருப்பம்.

நீண்ட காலம் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி குற்றப்பத்திரிக்கையை பெற்றுக் கொண்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

காலைல இருந்து வீட்டில் இருந்த அமலாக்க துறை! கைதுக்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியுமே! நீதிபதி | Senthil Balaji knows his arrest by ED, says 3rd judge - Tamil Oneindiaமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் பி.சண்முகம், உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.Senthil Balaji's brother Ashok Kumar's lawyer appears before Income Tax Department - officials inform | செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வக்கீல் வருமானவரித் துறை முன் ஆஜர் ...

செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார்.

குற்ற பத்திரிகையுடன், சுமார் 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிடபட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர்.

அமலாக்கத் துறை ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்... செந்தில் பாலாஜி தரப்பு வாதம்! | Senthil balaji side is ready to accept the conditions imposed by the court - kamadenu tamil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு இன்று குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. குற்றப்பத்திரிகை சுமார் 50 ஆயிரம் பக்கம் உள்ளதால் அதனை படிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று குற்றம் சாடப்பட்டவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.பொது நன்மை'க்காக தனியார் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | States not empowered to take over private properties for ...செந்தில் பாலாஜி வழக்கு அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.

அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்து சென்றனர்; லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது அமலாக்க துறை புகார்

இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது.செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கோர்ட்டில் ஆஜர்.. 2 ஆண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு சரண்! | Minister Senthil Balaji's Brother Ashok Kumar, Surrenders After 2 ...

பாலாஜியின் சகோதரர் அசோக் குமார்.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதற்கு பிறகு வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது.அவரது தம்பி தற்போது அப்ரூவராக மாற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மற்றும் எம்.எல் .ஏ பதவியை ரத்து செய்ய கோரியும் மனுவை தாக்கல் செய்யவிருக்கிறது அமலாக்கத்துறை. இந்த செய்தி திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது. இது திமுகவிற்கு கெரும் பின்னடைவாக அமையும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதையும் படிங்க.!