chennireporters.com

பாலியல் குற்றவாளி சிவசங்கர் பாபா சிறையிலடைப்பு.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் சிவசங்கர் பாபா தேடப்பட்டு வந்தார்.

அங்கு மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது புகார் கூறப்பட்டது.அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக பல புகார்கள் அளிக்கப்பட்டது பின்னர் சிவசங்கர் பாபா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிய நிலையில் சிவசங்கர் பாபா டேராடூன் தப்பிச்சென்றார்.

அங்கு தனது உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் வாங்கும் திட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி விஜயகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டது. வழக்கு தனது கைக்கு வந்ததும் வேகமாக இறங்கி எஸ்.பி விஜயகுமார் உடனே தனிப்படை அமைத்தார்.

சிவசங்கர் பாபாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது சிபிசிஐடி டி.எஸ்.பி குணவர்மன் தலைமையில் ஒரு டீம் இதற்காக டேராடூன் கிளம்பிச் சென்று முகாமிட்டிருந்தது.

சென்னை போலீஸ் வருவதை எதிர்பார்த்த சிவசங்கர் பாபா அங்கிருந்து தலை மறைவானார் இவருக்கு ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதால் விமான வழியாக எங்கும் செல்லமுடியாது.

இதனால் தரை வழியாக அவர் நேபாளம் செல்லும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வந்தன நேபாளத்தில் இவரது ஆசிரமம் இருப்பதால் அங்கு தான் செல்வார் என்று தகவல் கிடைத்தது.

சிவசங்கர் பாபாவின் சொகுசு பங்களா

இந்நிலையில் தான் தமிழ்நாடு சிபிசிஐடிக்கு இது தொடர்பான முக்கிய தகவல்கள் சில கிடைத்தன டெல்லியில் இருக்கும் சில முக்கிய அதிகாரிகள் மூலம் சிவசங்கர் பாபா டில்லிக்கு வர வாய்ப்புள்ளது என்று போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதேபோல் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையில் சிவசங்கர் பாபா டெல்லிக்கு தான் செல்கிறார்.என்ற உறுதியான தகவல் கிடைத்தது பின்னர் டெல்லியில் தலைமறைவாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலை தமிழக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிவித்தனர் அது பெரும் உதவியாக இருந்தது இந்நிலையில் டெல்லியில் சிவ சங்கர் பாபா எங்கே இருக்கிறார் என்ற இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னைக்கு கொண்டு வந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்அதன்பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபா மொட்டை அடித்து தனது உருவ அமைப்பை ஏமாற்றியுள்ளார் சிவசங்கர் பாபா பெரிய பிராடு பேர்வழி என்றும் அவன் போலி சாமியார் என்றும் மனிதனாக கூட வாழ தகுதியும் இல்லை என்று பத்து வருடங்களுக்கு முன்பு யாகவா முனிவர் கடுமையாக அவரை சாடியிருந்தார்.

தற்போது சமூக வலைதளங்களில் யாகவா முனிவர் சிவசங்கர் பாபா வை திட்டி தீர்க்கும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது சிவசங்கர் பாபா தொடர்பான விசாரணை இப்போது தான் தீவிரமடைந்துள்ளது.

விசாரணையில் சிவசங்கர் பாபாவின் அத்துமீறல்கள் கண்டு அவர் செய்த அத்துமீறல்களை கண்டு விசாரணையை குழுவிற்கு தலை சுற்றி வருகிறதாம் அந்த அளவிற்கு மிக கேவலமாக பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டல் செய்திருக்கிறாராம் கிழட்டு பாபா சி.பி.சி.ஐ.டி.யின் முழு விசாரணை க்கு பிறகு தான் பாபாவின் உண்மை முகம் என்ன என்று தெரியவரும் என்கிறார்கள் போலீசார்.

இதையும் படிங்க.!