chennireporters.com

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? தொடரும் மும்முனை போட்டி.

டி.ஜி.பி.திரிபாதி

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்குறிப்பாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம்.

இதனிடையே தற்போதைய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் திரிபாதியின் பதவிக்காலம் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

சீமா அகர்வால்

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காவல்துறையையும் கட்டுப்படுத்தக் கூடிய தலைமைப் பொறுப்பு டிஜிபி அடுத்து யாரை ஸ்டாலின் தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

டி.ஜி.பி பதவியை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் மொத்தம் 11 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

ஷகில் அக்தர்

அந்தப் பட்டியலில் டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், சீமா அகர்வால், ஏ.கே.விஸ்வநாதன், கந்தசாமி, ராஜேஷ் தாஸ், சங்கர் ஜுவால் உள்பட 11பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலை ஆய்வு செய்யும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சகமும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி மத்திய பணியாளர் தேர்வாணைய விதிகளின்படி மூன்று பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசிடம் கொடுக்கும்.

கந்தசாமி ஐ.பி.எஸ்

அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும் பொதுவாக அரசுகள் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளையே டி.ஜி.பி.யாக பணியமர்த்தும்.

என்பதால் ஸ்டாலினின் எதிர்பார்ப்பு யாராக இருக்கும் என்பது பற்றிய பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சைலேந்திர பாபு

ஆனால் ஸ்டாலினின் சாய்ஸ் கந்தசாமி அல்லது ஷகில் அக்தர், சைலேந்திரபாபுவாக இருக்கலாம் என்ற பேச்சுகள் காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த மூன்று பேரில் ஒருவருக்கு த்தான் டி.ஜி.பி. யாக வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க.!