chennireporters.com

எடப்பாடி பழனிசாமிக்கு டோஸ் விட்ட திமுக அமைச்சர்.

தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி 92 டன் அளவு கொண்ட அரிசி பண்படுத்த முடியாமல் வீணாக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு  உணவு பொருள் வழங்கல் துறை  அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார் . ஒன்றும் தெரியாமல் பேசுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள் பழனிச்சாமி! நீங்க வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல?என்று அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய உணவுக் கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன கூறியிருக்கிறது   நீங்களே படித்துப் பாருங்கள். நீங்க வகிக்கும் பதவிக்கு இது அழகா ? என எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டை மையப்படுத்தி அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றிய விவரம்  வருமாறு

திமுக ஆட்சியில் சுமார் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப் போய் வீணாகி விட்டதாக மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ,என்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி.  மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்த இந்திய உணவுக் கழக அதிகாரிகள் இது போன்ற அரிசியை வழங்கிய அரிசி ஆலை முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அந்த அரிசியை மனித பயன்பாட்டுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான இந்த செய்தியை ஆராயாமல் அதையே அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார். இந்திய உணவு கழகத்திடமிருந்து வந்த கடித நகலை உங்களுக்குத் தருகிறேன். அதில் என்ன இருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

கும்பகோணத்தில்  உள்ள 92.50 மெட்ரிக் டன், நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள் 92 .50 மெட்ரிக் டன் அதாவது 92 ஆயிரத்து 500 கிலோ அரிசி. இதன் மதிப்பு சுமார் 33 லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த அரிசி 5.2% சேதமடைந்த அரிசி என்றும், 7% பழுப்பு நிற அரிசி என்றும் சேதமடைந்த அரிசி 5% விழுக்காடுக்கு மேல் இருக்கக் கூடாது, ஆனால் பழுப்பு நிற அரிசி 7% இருக்கலாம் என்று 0.2% சதவீதம் கூடுதலாக சேதமடைந்து உள்ளது என்பதால் பொதுமக்கள் அனுபவிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளுக்கு இந்த அரிசி அனுப்பப்படவில்லை . இதோடு இந்த அரிசியை அனுப்பிய ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பேனைப் பெரிதாக்கி பெருமாள் ஆக்கியது போல் 92.500 கிலோ என்பதை 9 இலட்சம் டன் அரிசி என்று ஒரு முன்னாள்  முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுகிறார் என்றால் என்னவென்று சொல்வது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி ஆலை முகவர்கள் மற்றும்  வாணிப கழக ஆலைகள் மூலம் அரைத்து அரிசியின் தற்போதைய இருப்பே 3 லட்சத்து 23 ஆயிரத்து 554 டன் தான் உள்ளது.

தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜிடம் உண்மை நிலை என்னவென்று கேட்டிருக்கலாம் அல்லது வைத்திலிங்கமிடம் கேட்டிருக்கலாம்.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியைத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி வகித்த பதவிக்கும் தற்போது வகிக்கும் பதவிக்கும் இது அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன, என அறிக்கையில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் சக்கரபாணி.

கணக்கு தெரியாத எடப்பாடி பழனிச்சாமி தவறான எண்ணிக்கையை  குறிப்பிட்டுள்ளதை திமுக உணவு வழங்கல் துறை அமைச்சர் கிண்டலாக அறிக்கையில் கூறியிருக்கிறார் இனிமேலாவது பழனிச்சாமி கவனமாக தான் பேசுவதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இதையும் படிங்க.!