chennireporters.com

லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது.

சென்னை வில்லிவாக்கத்தில் குடும்ப தகராறில் சமரசம்  செய்து வைக்க லஞ்சம் கேட்ட பெண் இண்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை பூர்வீகமாகக் கொண்டவர் மோனிகாஸ்ரீ இவருக்கும் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த டாக்டர் வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  திருமணத்தின்போது 200 பவுன் தங்க நகைகள் வரதட்சணையாக கொடுப்பதாக மோனிகாஸ்ரீயின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் பேசியபடி 200 பவுன் கொடுக்கவில்லை எனக் கூறி மோனிகாவை அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது .

இதுகுறித்து மோனிகா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோனிகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டு பேரை போலிசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது இரு குடும்பத்தினரும் சமரசம் ஆகிவிட்டனர்.   இதை அடுத்து இந்த வழக்கை முடித்து வைக்க கோரி மோனிகாஸ்ரீ வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதாவை அணுகினார். அதற்கு அவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.  மோனிகாஸ்ரீயும் ஒரு லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் மேலும் 20,000 லஞ்சமாக தர வேண்டும் என மோனிகாவிடம் பெண் இன்ஸ்பெக்டர் கேட்டு நச்சரித்த்தாக கூறப்படுகிறது.   ஆனால் பணம் கொடுக்க முன்வராத மோனிகாஸ்ரீ இது பற்றி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் மோனிகாஸ்ரீ இடம். 20,000 பணம் கொடுத்து அதைப் பெண் இன்ஸ்பெக்டர் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர். டி. எஸ். பி .லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுராதாவை கைது செய்து மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது .

சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது ஏற்கனவே அனுராதா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் போலிசார் லஞ்சம் வாங்க பயந்தாலும் பெண் போலிசார் பயப்படாமல் லஞ்சம் வாங்குவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

இதையும் படிங்க.!