chennireporters.com

இறப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ” கொரோனா தொற்று பாதித்து பலியாகும் நபர்களுக்கு, கொரோனா காரணமான மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுகிறது. சக வக்கீல் கண்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத் திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப் பெறுவது தடைபடும். ஆகவே, பெருந்தொற்று காலத்தில் இணை நோய் உள்ளநிலையில், கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட பெஞ்சானது, “கொரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை, கொரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கொரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை. மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும். இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவிகரமாக இருக்கும்.

இணை நோய்கள் உடையவர்களும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால், கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

வழக்கு விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளன திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், ‘ திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்தவித அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருகிறது.

அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட பெஞ்ச், மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து இறைச்சி கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மேலும், இம்மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வார காலத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க.!