chennireporters.com

துப்பாக்கியுடன் பிடிபட்ட மூன்று ரௌடிகள் கைது.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.ஒரு கை துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் , திருநெல்வேலி அம்பாசமுத்திரம் தாலுகா, விகேபுரம் பகுதியை சேர்ந்தவர்.

சின்னதுரை , விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நல்ல மங்கலம் பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் இவர்கள் 3 பேரும் துப்பாக்கியோடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தனர்.

இவர்கள் குதிரை பந்தயத்தில் பங்கேற்பதாக கிண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கிண்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் கிண்டியில் உள்ள தனியார் லாட்ஜில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் மீதும் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், சிவகிரி பகுதிகளில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் நெல்லையில் இருந்து எதற்காக சென்னைக்கு துப்பாக்கியுடன் வந்தார்கள்.

சென்னையில் ஏதாவது துப்பாக்கி மூலம் யாரையாவது சுட்டுக்கொள்ள திட்டமிட்டு இருந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள ரௌடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களது நடவடிக்கை களை தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புற நகர் பகுதியில் உள்ள சில பெரிய தலைகள் வீழ்த்தப்படலாம் என்கிறார்கள் சில உயரதிகாரிகள்.

இதையும் படிங்க.!