#special story; exclusive story;
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த டாக்டர் பிரபு சங்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தற்போது ஒரு வருடம் மூன்று மாதம் 15 நாட்கள் ஆன நிலையில் தற்போது அதிரடியாக மாற்றப்பட்டு ள்ளார். அதற்கான காரணம் என்ன என்று நாம் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூரில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றம் செய்யப்பட்டு பதவியேற்ற நாளிலிருந்து சர்ச்சைக்குரியவராகவே விளங்கி வந்தார் டாக்டர் பிரபு சங்கர். திருவள்ளூர் மாவட்ட சமூக நல துறையில் விஜயலட்சுமி என்கிற வழக்கறிஞர் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். போக்சோ வழக்கு ஒன்றில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் பாதிக்கப்பட்டவருக்கு ஆஜராகினர்.
1. இந்த வழக்கு குறித்து எந்தவித விபரமும் அறியாமல் டாக்டர் பிரபுசங்கர் சம்பந்தப்பட்ட விஜயலட்சுமியை அவதூறாக பேசி பெண்ணென்றும் பாராமல் கடுமையாக நடந்து கொண்டார் என்று புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் காவல் நிலையத்தில் கலெக்டர் மீது புகார் அளித்திருந்தார். அவருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வழக்கறிஞர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
2. அதன் பிறகு அரசு ஆசிரியர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆசிரியர்களை ஒருமையில் மரியாதை குறைவாக பேசியதால் ஆசிரியர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அதன் பிறகு அவர்களிடமும் மன்னிப்பு கேட்டார்.3. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களை நீண்ட நேரம் காக்க வைத்து தொடர்பாக விவசாயிகள் கேள்வி கேட்டபோது அவர்களை ஒறுமையில் பேசி அவர்களை கண்ணிய குறைவாக நடத்தினார். அப்போது ஏற்பட்ட விவாதத்தில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி.
4. புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த தலைவர் ஜெகன் மூர்த்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த போது அவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டார் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாதி ரீதியாக நடந்து கொள்ளுகிறார் என்கிற பேச்சு எழுந்த போது அவரிடம் மன்னிப்பு கேட்டார்.5. பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட அரசு விழா ஒன்றிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விழாவில் கலந்து கொள்வதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் காத்திருந்து கோபமடைந்தனர் அப்போது விழாவிற்கு வந்த கலெக்டரிடம் விளக்கம் கேட்டபோது எம் எல் ஏ கிருஷ்ணசாமி கலெக்டர் பிரபுசங்கரை ஒருமையில் பேசியதாகவும் அப்போது இவரும் ஒருமையில் பேசியதாக விவாதம் ஏற்பட்டது. இதில் அப்போது எம்எல்ஏ கிருஷ்ணசாமி இடம் பிரபு சங்கர் மன்னிப்பு கேட்டார்.
6. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்களை அவமரியாதையாக பேசிய விஷயத்தில் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டார். இப்படி பலரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார் பிரபு சங்கர்.
T. Prabhushankar I.A.S
இது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது நேரடியாக பிரபு சங்கர் டாக்டருக்கு படிக்காமல் பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ் ஆகி இருந்தால் மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிந்து கொண்டிருப்பார். அவர் மருத்துவம் படித்துவிட்டு ஐ.ஏ.எஸ் ஆனதால் டாக்டர் என்கிற மனப்பக்குவத்திலிருந்து அவர் மீளவே இல்லை. அந்த மனநிலையிலேயே பொதுமக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் அவர் நடந்து கொண்டார். அதுவே அவரின் நடைமுறை பணிகளில் சுனக்கம் ஏற்பட்டது.Alby john varghese, I.A.S
பொதுவாக நேரடியாக ஐபிஎஸ் தேர்வாகி வருபவர்கள் பொதுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் மன்னிப்பு கேட்ட சம்பவம் ரொம்ப குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இவர் பணியாற்றிய இடங்களில் எல்லா இடங்களிலும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி பேசு பொருளானார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பலமுறை பல தடவை மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவே இந்திய ஆட்சிப் பணி தேர்வில் நேரடியாக வெற்றி பெற்றவர்களுக்கு அது பேர் இழப்பாகும் என்கின்றார்.
P. Ponniah, I.A.S
இதற்கு முன்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்ஃபி ஜான் வர்கீஸ் இரண்டு வருடம் 3 மாதம் 29 நாட்கள் பணியாற்றியுள்ளார். அவருக்கு முன்பாக பொன்னையா ஏழு மாதம் 14 நாட்கள் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் பணியாற்றிய மகேஸ்வரி ரவிக்குமார் இரண்டு வருடங்கள் இரண்டு மாதம் ஐந்து நாட்கள் பணியாற்றியுள்ளார். அதற்கு முன் பணியாற்றிய சுந்தரவல்லி இரண்டு ஆண்டுகள் 7 மாதம் இரண்டு நாட்கள் பணியாற்றியுள்ளார்.
tmt. Mageswari Ravikumar, I.A.S.
அதற்கு முன்னர் பணியாற்றிய வீரராக ராவ் மூன்று ஆண்டுகள் இரண்டு மாதம் 21 நாட்கள் பணியாற்றியுள்ளார். இப்படி ஏறக்குறைய ஆறு மாவட்ட ஆட்சியர்களில் பொன்னையா மட்டுமே குறைந்த நாட்கள் பணியாற்றியுள்ளார. அவர் நேரடியாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் இல்லை ஆனால் நேரடியாக ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபு சங்கர் ஒரு ஆண்டுகள் மூன்று மாதம் மட்டுமே பணியாற்றியுள்ளார்.
tmt. E.Sundaravalli, I.A.S.
அதிக பட்டசமாக எஸ்.கே. பிரபாகர் 4 ஆண்டுகள்5 மாதம் 5 நாட்கள் பணியாற்றியுள்ளார். டாக்டர் பிரபு சங்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மண், மணல் குவாரிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதே போல டாஸ்மார்க் பார் முறைகேடுகள் தொடர்பாக பல புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போல மாவட்டம் முழுவதும் பி.டி.ஒ.க்கள் அடித்த கொள்ளை மற்றும் ஊழல்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல புழல் பிடிஒ சித்ரா அரசு அனுமதி இல்லாமல் பல கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கி பல கோடி ஊழல் நடந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அனுமதி பெறாத பல லேஅவுட்டுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளார் . அது குறித்து செல்வம் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர்கள் நீதிமன்றத்தில் வ.க்கு தொடர்ந்துள்ளனர். கலெக்டரிடமும் பல புகார்கொடுத்துள்ளனர் அந்த புகார்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அது தவிர மாவட்ட முழுவதும் நடந்த அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூலகம் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது அந்த நூலகம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் கூட செலவாகி இருக்காது என்கின்றனர் மூத்த பொறியாளர்கள் அதே போல பார்க்கிங் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
K.Veera Raghava Rao, I.A.S.
புதிய கூட்ட அரங்கம் கட்டியதில் ஊழல் நடந்துள்ளது. தற்போது ஆறு கோடி மதிப்பில் கூட்ட அரங்கம் கட்ட பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராகவே செயல்பட்டதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
எனவே, அரசு இவர் பனிக்காலத்தில் நடந்த அனைத்து பணிகள் தொடர்பாக நேர்மையான தனி அதிகாரியை வைத்து ஆய்வு நடத்தி விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். இது தவிர டாக்டர் அம்பேத்கர் பட்டியல் பழங்குடி முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் தொழுவூரை சேர்ந்த மோகன் என்பவர் இவர் ஏற்கனவே ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினராக பதவி வகித்தவர். அவர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு எதிராக பல புகார்களை அரசுக்கு அனுப்பியுள்ளார். அதே போல தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் கலெக்டர் மீது புகார் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
புதிய செய்தி; தற்போது கலெக்டர் பிரபு சங்கர் தனது முகாம் அலுவலகத்தில் பல கோப்புகள் தேங்கி நிற்கிறது. அந்த கோப்புகள் எல்லாம் அவரும் அவர் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல தொழிலதிபர்கள் பயனடையும் வகையில் உள்ள கோப்புகள் . எனவே அந்த கோப்புகளில் வேகமாக கையெழுத்து போடும் சம்பவம் நடைபெற்று வருகிறது என்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்.
இந்த செய்தி குறித்து கலெக்டர் பிரபுசங்கர் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.