மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிஷ், ஹரிசக்தி.
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்கள். அது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிப்பவர்களை அடிப்பதும், கொலைமிரட்டல் விடுப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். 
பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில் சம்பவதன்று இரவு, இவர்கள் சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்), மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பேச்சாவடி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோர் கண்டித்துள்ளனர்.

இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை படுகொலை குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை தேடி வருகின்றனர். சாராய வியாபாரிகளால் இரட்டை கொலை அரங்கேறிய நிலையில் அரசு மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
டிஜிபி சங்கர் ஜுவால்.
இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார், தங்கதுரை, ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார் மூவேந்தனை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் நள்ளிரவில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்ததால் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இந்த கொலைக்கான காரணம் உளவுத்துறை முற்றிலும் முடங்கிப் போனது தான் என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள். குற்ற சம்பவங்கள் நடக்கும் இடம் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதான தகவலை உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் உடன் உளவுத்துறை போலீசாரும் கைகோர்த்துக்கொண்டு லஞ்சம் வாங்குவதாலேயே இது போன்ற படுகொலைகள் நடைபெறுகிறது என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.
எனவே இதில் சரியாகப் பணியாற்றாத உளவுத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கும் செய்ய வேண்டும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
