chennireporters.com

ஐந்து ஆண்டுகளாக சம்பளம் தராத(UNI) செய்தி நிறுவனம்.அலுவலகத்திலே தற்கொலை செய்து கொண்ட ஃபோட்டோ கிராபர்.

சென்னையில் உள்ள செய்தி(UNI) நிறுவனத்தில் பணிபுரிந்த மூத்த புகைப்பட கலைஞர் குமார் நேற்று இரவு அலுவலகத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் குமாரின் உடலை சக ஊழியர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில், போலீஸார் அங்கு வந்து புகைப்படப் கலைஞர் குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர்,

அங்கு அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, திங்கள்கிழமை குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

56 வயதான குமாருக்கு மனைவி, மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.யு.என்.ஐ.செய்தி நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதாவது ஆறுமாதங்கள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் கடுமையான நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வந்ததாகவும், ‘சம்பளப் பாக்கியை’ எதிர் கொண்டதாகவும் தெரிகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள புகைப்படப் பத்திரிக்கையாளரான குமார், செய்தி நிறுவனத்தின் தரவரிசையில் அதன் மாநில பணியகத் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தார்.

அவர் 1986 இல் அந்த செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார்,மேலும் குமார் தமிழ்நாட்டில் ஒரு செய்தி நிறுவனத்தின் மாநிலத் தலைமை பொறுப்பேற்ற முதல் புகைப்படக் கலைஞர் ஆவார்.

மூத்த புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் தி.குமார் மறைவுக்கு சென்னையில் அனைத்து பத்திரிகையாளர் மன்றங்களும் இரங்கல் தெரிவித்துள்ளது.

குமார் உழைப்பால் படிப்படியாக உயர்ந்து யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் சென்னை கிளையின் தலைமை நிர்வாகி பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டவர்.

மறைந்த யு.என்.ஐ. தலைமை புகைப்பட கலைஞர் குமார்.

சக பத்திரிகை தோழர்களிடம் அன்போடு பழகும் தன்மை கொண்டவர்.திரு.குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

யு.என்.ஐ செய்தி நிறுவனம் கடந்த 5 வருடங்களாக தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்காமல் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கி வஞ்சித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் திரு.தி.குமாரின் அகால மரணம் இந்த வஞ்சகத்தை வெளிக் கொண்டு வந்துள்ளது.உடனடியாக யு.என்.ஐ செய்தி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முழுமையான ஊதியங்களை வழங்கிட வேண்டும்.

தொழிலாளர் நலத்துறை இதை உறுதி செய்திட வேண்டும்.மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இருந்த திரு.குமார் அவர்களின் இந்த அகால மரணம் பெரும்.

துயரத்தை தந்துள்ள நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் திரு.குமார் அவர்களின் குடும்பத்திற்கு இறங்கல் தெரிவித்து மூன்று லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நம் சக தோழர்கள் கவனத்திற்கு தாழ்மையான வேண்டுகோள்:  பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் எதுவாக இருந்தாலும் நம் சக நண்பர்களுடன் மனம் விட்டு பேசி தீர்வுக்கு வழி காண முயற்சி செய்வோம்.

நம்மை நம்பி,சார்ந்து நமது குடும்பம் இருப்பதை நினைவில் நிறுத்துவோம். தற்கொலை செய்து கொள்வதால் நமது குடும்பத்தின் பொருளாதார சூழலும் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

எனவே வறுமை மனப்போராட்டம் எல்லாத்தையும் எதிர்கொண்டு நாம் போராட வேண்டும் என்பது மூத்த பத்திரிக்கையாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

மூத்த புகைப்படக்கலைஞர் குமார் இழப்பிற்கு நிதி திரட்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள போட்டோகிராபர்கள் சங்கத்தினர் குமுதம் மூத்த புகைப்படக்
கலைஞர் செந்தில்நாதன் நக்கீரன்.

மூத்த புகைப்பட கலைஞர் ஸ்டாலின் அவர்கள் இருவரும் நிதி வசூல் செய்து தரும் பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உதவி செய்ய வேண்டுவோர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களால் முடிந்த நிதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க.!