திமுகவின் மூத்த தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்து அரசியல் செய்தவர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையில் திமுக செயல் படத் தொடங்கிய பொழுது ஸ்டாலின் உடன் நெருக்கமாக இருந்து வழி நடத்திச் சென்றவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் திடீரென கே எஸ் ராதாகிருஷ்ணன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதிலிருந்து ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு எதிராகவும் பழைய வரலாற்று சம்பவங்களையும் தனது முகநூல் பதிவில் தொடர்ந்து எழுதி வந்தார்.
கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியை வளர்க்க என்ன செய்ய வேண்டும் எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என பல கட்சியின் முக்கிய செய்திகளையும் பழைய சம்பவங்களையும் தொடர்ந்து எழுதி வந்தார். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணம் என்ன என்று தற்போது கே.எஸ். ராதாகிருஷ்ணன் 13 விஷயங்களை குறிப்பிட்டு தனது முகநூல் பதிவில் எழுதியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை நாம் நமது வாசகர்களுக்கும் திமுகவினருக்கும் அப்படியே பதிவு செய்கிறோம்.
மு.க.ஸ்டாலின்.
உதயநிதி.
இன்பநிதி.