chennireporters.com

நடிகர் மனோபாலா மரணம் ரசிகர்கள் அதிர்ச்சி.

தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர் இயக்குனர் மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவர் நடித்த படங்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது மரணம் தமிழ் ரசிகர்களுக்கு  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று அவர் காலமானார் அவருக்கு வயது 69.  தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் என்கிற பெயர் பெற்றவர். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சினிமாவுக்குள் நுழைந்த மனோபாலா ரஜினிகாந்த், மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினிகாந்த் மனோபாலா மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை சேர்ந்த முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமலஹாசன், விஜயகாந்த், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்க இயக்குனர் மணிரத்தினம் பி சி ஸ்ரீராம் ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தின் மனோ பாலாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது அனைவரையும் சிரிக்க வைத்து வாழ்ந்த கலைஞன் மறைவால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

நடிகர் சத்யராஜ் கண்ணீர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த  நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் இன்று ஹைதராபாத்தில் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலானது.  ஆனால் அதை அவரது உறவினர்கள் அதை  மறுத்துள்ளனர். சரத்பாபு நலமுடன் இருக்கிறார். அவரைப்பற்றி வரும் செய்திகள் தவறானது என்று அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!