chennireporters.com

#Fraud of several lakhs in providing loans; மகளிர் குழுவில் லோன் வழங்குவதில் பல லட்சம் மோசடி .

திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் குழுவிற்கு வழங்கப்படும் கடன் தொகையில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூரை சுற்றியுள்ள ஈக்காடு பகுதியில் 56 மகளிர் குழுக்கள் இயங்கி வருகின்றன. வங்கி மேலாளர் நதியா. 

ஒவ்வொரு குழுவிற்கும் தலா ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு குழுவில் குறைந்தபட்சம்  20லிருந்து 25 பேர் வரை உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக பாரதி மகளிர் குழுவில் 10 லட்சம் ரூபாய் லோன் எடுத்து இருக்கிறார்கள். மல்லிகை, ரோஜா, தாமரை, செந்தாழம்பூ போன்ற குழுக்களும் தற்போது குறைந்த அளவில் கடன் பெற்று உள்ளனர். இந்த குழுக்களில் உள்ள அனைவரும் தவறாமல் தங்களுடைய சந்தா பணத்தை தவணைக்காலம் முடிவதற்கு முன்பாகவே ஒழுங்காக கட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென பலரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதாவது மகளீர் குழுக்கள் ஏற்கனவே வாங்கி உள்ள கடனை காட்டிலும் அதிக அளவில் பணம் வங்கிக்கு செலுத்தப்பட வேண்டி உள்ளது என்று குறுந்செய்தி  அவர்களின் செல் போன் நம்பருக்கு செய்தியாக வந்துள்ளது. இது குறித்து நேரில் சென்று வங்கி மேலாளர் நதியாவிடம் கேட்டதற்கு நீங்கள் அனைவரும் உடனடியாக வங்கியில்  பெற்ற அனைத்து கடனையும் உடனடியாக கட்டுங்கள் இல்லையென்றால் உங்களுடைய கணக்குகள் முடக்கப்பட்டது முடக்கப்பட்டது தான். அதை விடுவிக்க முடியாது என்று கடும் எச்சரிப்புடன் பேசியதாக தெரிகிறது. ஏறக்குறைய திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் 38 பஞ்சாயத்துகளில் 1500 க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வருகின்றன

வங்கி ஊழியர் பவானி.

இந்த குழுக்களில் ஒவ்வொரு குழுவின் தலைவரிடம் வங்கி மேலாளர் நதியா தன்னுடைய வங்கியில் பணியாற்றும் வங்கி ஊழியர் பவானி என்பவர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடனாக லோன் கொடுக்கும்படி பல குழுக்களுக்கு உத்தரவு போட்டுள்ளார். அதன் படி பல குழுவினர் பவானியின் பெயரில் ஒவ்வொரு லட்சம் லோன் வழங்கியுள்ளனர். மேனேஜர் நதியா தனது வீட்டு செலவுக்காக எடுத்து கொண்டதாக தெரிகிறது. இப்படி பல லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி மேலாளர் நதியாவை நாம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை இது குறித்து வங்கி மேலாளர் நதியா தன்னுடைய விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

சம்பந்தப்பட்ட இந்தியன் வங்கி மகளிர் குழுவுக்கு லோன் கொடுக்கும் மேலாளர் நதியா எந்த அடிப்படையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது அலுவலகத்தில் பணியாற்றும் பவானிக்கு மற்ற குழுக்களில் இருந்து லோன் கொடுக்க உத்தரவிட்டார் என்ற கேள்வி எழுகிறது ஆனால் அந்த கேள்விக்கு இதுவரை அவர் ஏதும் பதில் சொல்லவில்லை அது தவிர எத்தனை குழுக்களில் இதுவரை பவானி பெயரிலோ அல்லது மற்றவர்களின் பெயரிலோ நதியா லோன் எடுத்திருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் வங்கி மேலாளரை கேள்வி கேட்கும் குழுக்களின் வங்கி கணக்கை முடக்கி வருகிறார் வங்கி மேலாளர் நதியா.

மேலும் இதுகுறித்து எல்.டி.எம் அவர்கள் நதியா செய்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய ஆய்வு நடத்தி மகளிர்  குழுவிற்கு வழங்கப்படும் கடன் தொகையில் நடந்துள்ள முறைகேடுகள் எவ்வளவு என்பதை கண்டறிந்து நதியா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மகளிர் குழுவை சார்ந்த பெண்கள்.

 

கடன் தொகையை ஒழுங்காக கட்டி முடித்த மகளிர் குழுவிற்கு மீண்டும் கடன் வழங்க வேண்டும் என்றால் வங்கி மேலாளர் நதியாவுக்கு கப்பம் கட்டினால் தான் கடன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது அது தவிர வங்கி விபரங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது சிறிய பிரச்சனைகள் இருந்தாலோ அதில் ஒவ்வொன்றுக்கும் 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் என வசூலித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது எனவே இந்த மகளிர் குழுவிற்கு கடன் வழங்கியதில் என்னென்ன முறைகேடுகள் நடந்து இருக்கிறது என்பதை எல்.டி.எம் அவர்களும் மற்றும் வங்கி அதிகாரிகளும் சிறப்பு அதிகாரியை நியமித்து ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மகளிர் குழுவினர்.

இந்த புகார் குறித்து வங்கி மேலாளர் நதியா அவர்கள் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்

இதையும் படிங்க.!