chennireporters.com

#Many fake fraud reporters; கோவையில் உலா வரும் பல போலி ஃபிராடு நிருபர்களுக்கு காப்பு போடுவாரா புதிய போலீஸ் கமிஷ்னர் சரவண சுந்தர்?

#சிறப்பு செய்தி….#பிரத்யேக படங்கள் #மற்றும் ஆதாரங்களுடன்…. 

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகரித்து வரும் போலி நிருபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கான காரணம் என்ன என்று அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் குறிப்பாக ஆர்டிஓ ஆபிசில் மாதம் 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் கோவை டுபாக்கூர் ரிப்போர்ட்டர்கள் குறித்து காரி உமிழ்கிறார்கள் RTO ஆபிஸ் அதிகாரிகள். கோயமுத்தூரில் எழுதப் படிக்கத் தெரியாத சில டுபாக்கூறுகள் விபச்சார விடுதி நடத்தும் உரிமையாளர்களிடத்திலும் டாஸ்மாக் மது கடை மற்றும் ஆர்டிஓ, ரேசன் கடை ஆகிய அலுவலகங்களில் கையெழுத்துப் போட்டு லஞ்சம் வாங்கும் செய்தி தற்போது ஆதாரத்துடன் நமக்கு  கிடைத்துள்ளது.முத்துக்குமார் என்பவர் டூபாக்கூர் ரிப்போட்டருக்கு கூகுள் ஃபேவில் பணம் அனுப்பிய விபரம்.

இது குறித்து நாம் நமது செய்தியாளர் மற்றும் போட்டோகிராபர் அடங்கிய குழு கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் பல முக்கிய சுற்றுலா தளங்களில் நடக்கும் விஷயங்களை தொடர்ந்து எழுதி வருகின்றனர். அந்த அடிப்படையில் நமக்கு கிடைத்த பிரத்தியேகமான புகைப்படங்கள் செய்திகளை வாசகர்களாகிய உங்களுக்கு அளிக்கிறோம்.

இவர்கள் சன் டிவி குடும்பத்தில் பணியாற்ற வில்லை. போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டு ஊரை ஏமாற்றுவது தான் வேலை.  முத்துக்குமார் பெயருள்ள இந்த நம்பருக்கு 8825594658 என்பவருக்கு 75 ஆயிரம் பணம் அனுப்பபட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் அதிகரித்து வண்ணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே, அந்த வகையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள பத்திரிகைகள், இணையதளங்கள் அவற்றின் அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து தங்களுடைய புகைப்படங்களை ஒட்டிக்கொண்டு தாங்கள் வசிக்கும் பகுதியில் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதாக அனைத்து இடங்களிலும் இந்த அடையாள அட்டையை காட்டி ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்து வருவதாக நமது அலுவலகத்திற்கு நிறைய புகார்கள் வரப்பெற்றது.  அது தவிர ஏற்கனவே நாம் கோயம்புத்தூர், திருப்பூர் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள ஃபிராடுகள் பற்றி நிறைய செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.கோவை பழைய போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன்.

அந்த வகையில் கோயம்புத்தூர் நகர் பகுதியில் மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஸ்பா சென்டர் என இயங்கும் மையங்களில் விபச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த விபச்சாரங்கள் நடத்தும் ஸ்பா சென்டர் உரிமையாளர்கள் டுபாக்கூர் பத்திரிகையாளர்களுக்கு மாதம் மாதம் google pay-வில் பணம் வழங்கி வருகிறார்கள். யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கி இருக்கிறார்கள். மாதம் எவ்வளவு வழங்குகிறார்கள் என்பது குறித்த  ஆதாரங்களுடன் நமக்கு புகைப்படங்கள் நமக்கு கிடைத்துள்ளது.அதே போல ஆர்டிஓ, ஆபீஸ், ரேஷன் கடை, டாஸ்மாக் பார் நடத்தும் உரிமையாளர்கள் ஆகிய இடங்களுக்குச் சென்று மாதம் ஒரு நோட்டு புத்தகத்தில் தாங்கள் பணியாற்றும் பத்திரிகையின் பெயர் தங்களுடைய பெயர் செல்போன் நம்பர்  எழுதி 200 ரூபாய் 300 ரூபாய் என பணம் பெற்று பிச்சை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பல பத்திரிகையில் பணியாற்றுவதாக தன்னை மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் அருண் ஹென்ரிக்ஸ் என்னும் ஆண் விபச்சாரன் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை தவறாக பயன்படுத்தி ஸ்பா சென்டரில் பணம் பறித்து வருகிறார்.ஸ்பா சென்டர் நிறுவனர்கள் சங்கிலி என்பவருக்கு 9750578363 என்ற நம்பரிலிருந்து பணம் அனுப்பியுள்ளார்.அது மட்டும் இல்லாமல் பல முக்கியமான முன்னணி பத்திரிகையாளர்களை இரவு நேரங்களில் குடித்துவிட்டு குடிபோதையில் தொடர்ந்து அவர்களுக்கு செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசுவது தேவையில்லாமல் எதையாவது பேசி அவர்களை டென்ஷன் ஆக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பாக அவர் மீது நிறைய புகார்கள் கோயம்புத்தூரில் கொடுக்கப்பட்டுள்ளது.அமைச்சருடன் டுபாக்கூர் நிருபர் ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ்.

திருட்டுத்தனம் செய்பவனிடம் திருடர்கள் சென்று தங்களை மிகப்பெரிய பத்திரிகையாளர்கள் என்று சொல்லி பணம் பறித்துக் கொள்வதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை உப்பை தின்றவன் தண்ணி குடிப்பான் என்பதைப் போல ஒரு நாள் சிக்கும்போது சிதைக்கப்படுவார்கள் என்பதை உணராமல் சீனியராக உள்ள சில பத்திரிகையாளர்களை அவதூறாக பேசுவது தன்னுடைய முகநூலில் தவறாக பதிவு செய்வது வேறு ஏதாவது ஒரு செல் நம்பரில் அவர்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு போன் செய்து அவர்களை பற்றி அவதூறு பரப்புவது இது போன்ற வேலைகளை செய்து வரும் ஆண் விபச்சாரான் அருண் ஹென்ரிக்சின் முகத்திரையை கிழிப்பதற்காகவே நமக்கு பிரத்தியேகமான படங்கள் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதை வாசகர்களாகிய உங்களுக்கு நாம் அப்படியே வழங்குகிறோம்.

ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ் கோயம்புத்தூரில் மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் பற்றி பல்வேறு அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில்  வெளியிட்டு வருகிறார்.

கோவை துடியலூர் ஆர்.டி.ஒ ஆபிசில் ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ் கையெழுத்து போட்டு 200 ரூபாய் பிச்சை வாங்கிய ஆதாரம்.

அவரை சந்திக்க இரண்டு அழகிய பெண்கள் அடிக்கடிக்கு வந்து செல்வதாகவும் கோயம்புத்தூரில் அவர் பதவியேற்ற பிறகுதான் அதிகமான இந்த விபச்சார மையங்கள் உருவானது. இந்த விபச்சார விடுதிகள் நடத்துபவர்கள் அனைவரும் மாத மாதம் அவருக்கு கமிஷன் தருகிறார்கள் அதனால் தான் எங்களைப் போன்ற டுபாக்கூர் பத்திரிகையாளர்கள் சுகபோகமாக வாழ்கிறோம் அவர் எங்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கமாட்டார் என்கிறார்.

ஸ்பா உரிமையாளர்களுக்கு ஜால்ரா தட்டும் இன்ஸ்பெக்டர்.

எங்கள் மீது புகார் கொடுத்தாலும் டி.சி.ஸ்டாலினோ அல்லது பாலகிருஷ்ணனோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பார்கள் அவர்கள் தான் எங்களுக்கு பலம் என்று சொல்லி வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர் சொன்ன அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டுவிட்டனர்.  இந்த டுபாக்கூர்களுக்கு தான் உயர் போலிஸ் அதிகாரிகள் ஆதரவாக செயல்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஏறக்குறைய திருப்பூர், பல்லடம், கோயம்புத்தூர் நகரம், புறநகர் மற்றும் சுற்றுலாத் தலங்களில் எந்த கடத்தல் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் நடக்கிறது என்பதை இந்த அருணகிரிஸ் போல உள்ள சில டுபாக்கூர்கள் லிஸ்ட் எடுத்து அவர்களை செல்போனில் மிரட்டி பணம் பறிப்பது தான் இவர்கள் தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் மேற்படி சட்டத்திற்கு புறம்பாக தொழில் நடத்துபவர்கள் யாரும் இவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் செய்யும் தொழில் என்னவென்று அவர்களுக்கே தெரியும். எனவே இவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் உல்லாசமாய் விபச்சார விடுதி நடத்துபவர்களின் பணம் வாங்கி தன் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.அந்த பணத்தில் தான் இவர்கள் சோறு தின்கின்றனர் இவர்களது குடும்பமும் சாப்பிடுகிறது என்று நினைக்கிற பொழுது வெட்கி தலை குனிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆண் விபச்சாரன்அருண் ஹென்ரிக்ஸ் மீது ஏறக்குறைய ஐந்தாறு வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது எந்த வழக்குகளிலும் இதுவரை ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ் கைது செய்யப்படவில்லை காரணம் அவர் சில இன்ஸ்பெக்டர்களுக்கு மாமா வேலை பார்ப்பதினால் அவர் தப்பித்து விடுகிறார். சில மாமா அன்ஸ்பெக்டர்களும் ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் எந்த காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காவல் நிலையத்திற்கு சென்று தான் பெரிய பத்திரிகையாளர் என்று ஒரு ஃபிராடு கூட்டத்தை அழைத்துச் சென்று தீபாவளிக்கு வசூல் வேட்டை நடத்துகிறார். யார் உண்மையான பத்திரிகையாளர் என்று தெரிந்து கொள்ள கூட தகுதி இல்லாத சில காக்கி சட்டை  திருடர்களும் ஆண் விபச்சாரன் அருண் ஹென்ரிக்ஸ்க்கு  போன்ற புரோக்கர்களுக்கு சாதகமாக செயல்படுவது காக்கி சட்டையில் படிந்த கரை, அசிங்கம், அவமானம் என்கின்றனர் கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள்.புதிய போலீஸ் கமிஷ்னர் சரவண சுந்தர் ஐ.பி.எஸ்

கோவை மாநகரத்திற்கு புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள சரவண சுந்தர் ஐ.பி.எஸ் அவர்கள் கோவை மாநகரம் முழுவதும் உள்ள ஸ்பா சென்டர் களை மூடி விபச்சாரத்தை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அது தவிர பத்திரிகையாளர் என்ற போர்வையில் கள்ளத்தனமாக கஞ்சா விற்பவர்கள் சாராயம் கடத்துபவர்கள் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் பிராடுகள் கூட்டத்திற்கு காப்பு போட்டு கலி சாப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கோவை மாநகரில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர்.

இதையும் படிங்க.!