நாளுக்கு நாள் காவல்துறையில் புகார் கொடுக்க வரும் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஆவடியில் தனது காணாமல் போன பைக்கை கண்டுபிடித்த காவலர் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் லாஜிக் வா என்று மிரட்டி அடைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் போலீசாரை விமர்சித்து கமெண்ட் அடித்து வருகின்றனர் ஆண்மை இல்லாதவனுக்கு பெயர் அரிதாசா கமிஷனர் செவுடா ஏசிக்கு கண்ணு தெரியாதா ஹரிதாசுக்கு பொண்டாட்டி இருக்கிறதா ஊராம் பொண்டாட்டி என்றால் போலீஸ்கார நாய்களுக்கு இனிக்குமா அவன் வீட்டில் உள்ள பொண்டாட்டிகள் எல்லாம் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
எனவே கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட காவலர் ஹரிதாஸ் மீது போஸ்கோ சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாமாக முன்வந்து லஞ்சம் கேட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது நடவடிக்கை எடுப்பாரா கமிஷனர் அல்லது ஆயுதப் படைக்கு மாத்தி பிரச்சனையை கிடப்பில் போடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆவடியில் தொலைந்து போன பைக்கை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த காவலரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இந்த பெண் கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இது குறித்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், பைக் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன், வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடு போன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவடி குற்ற பிரிவை சேர்ந்த காவலர் ஹரிதாஸ், புகார் கொடுத்த பெண்ணை தொடர்புகொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது, வாகனத்தை பெற்றுக்கொள்ள வரும்படி அழைத்துள்ளார். மேலும், வாகனத்தை ஒப்படைக்க அப்பெண்ணிடம் ரூ.15,000 ரூபாய் லஞ்ச பணம் கேட்டுள்ளார்.
ஆவடி குற்ற பிரிவை சேர்ந்த காவலர் ஹரிதாஸ்.
ரூ.15,000 கொடுக்கும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும், ரூ.5,000 பணம் தருவதாக அப்பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பெற்றுக்கொள்ள காவலர் ஹரிதாஸ் அப்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு நேரில் அழைத்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் பேசிய அவர், “மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை கண்டுபிடித்துள்ளோம். உன் மீது எனக்கு ஆசையாக உள்ளது. என்னுடன் நீ தனிமையில் இருக்க வேண்டும். உனக்காக அறை எடுத்துள்ளேன்” என்று அத்துமீறி ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், ஆவடியில் உள்ள பிரபல ப்பிரித்தா கார்டன் விடுதிக்கு வருமாறும் அவர் அழைத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண், இதுபற்றி தனது அண்ணனிடம் கூறியுள்ளார். பின்னர், அந்த பெண் தனது அண்ணனுடன் காவலர் கூறிய இடத்துக்கு சென்று, அங்கு காவலருக்கு சந்தேகம் வராமல் இருக்க இருவரும் தனி தனியாக இருந்துள்ளனர்.
பின்னர் காவலர் ஹரிதாஸ் அந்த பெண்ணை விடுதிக்கு அழைத்து செல்வதை பின் தொடர்ந்தபடியே கவனித்த பெண்ணின் அண்ணன், விடுதி நுழைவு வாயிலில் வைத்து காவலரை கையும் களவுமாக பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தகாத முறையில் நடக்க முயன்ற காவலரை மீட்டு, அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது அண்ணன் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ், காவலர் ஹரிதாசிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.