chennireporters.com

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.

கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

அங்கு தனக்கு படிக்க விருப்பமில்லாமல் டி.சி. வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார்.அதில் யாரையும் சும்மா விடக்கூடாது.ரீத்தாவின் தாத்தா, எலிசா சாரோட அப்பா, மிதுன் சக்கரவர்த்தி உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

மிதுன் சக்கரவர்த்தி

அந்த பள்ளியில் படிக்க மாணவிக்கு விருப்பமில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தன் நண்பர்களிடம் இது பற்றி கூறியுள்ளார்.

மாணவியின் தற்கொலை மற்றும் அவரது கடிதமும் நண்பர்களின் பேட்டியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.எனவே அந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மாணவி எழுதியுள்ள கடிதம்.

இந்நிலையில் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் .

மாணவியின் மரணம் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அண்மைக்காலமாக கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நல்வாழ்வு அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.

மாணவியின் தற்கொலைக்கு காரணமான கோவை சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை தப்பிக்க விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

மாணவியின் தற்கொலைக்கு பள்ளியின் நிர்வாகமும் பிரின்ஸ்பலும் முக்கிய காரணம் என்று மாணவியின் பெற்றோர்கள் கூறுகின்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன்

விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியை மிதுன் சக்கரவர்த்தி பள்ளியில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுதவிர செல்போனிலும் ஆபாச செய்திகளும் ஆபாசப் படங்களும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மிதுன் சக்கரவர்த்தி என் மனைவிக்கு தகவல் சொல்லியும் அவர் தனது கணவனை கண்டித்து வைக்கவில்லை அதுதவிர பிரின்ஸ்பலுக்கு தகவல் சொல்லியும் அவரும் மிதுன் சக்கரவர்த்தி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கை தொடர்ந்து அண்மைக்காலமாக பல தனியார் சிபிஎஸ் பள்ளிகளில் இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க.!