chennireporters.com

திருத்தணியில் திமுக முதல் வெற்றி.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடை பெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி நகராட்சியில் முதல் வெற்றி கனியை பறித்து திமுக.21 வார்டுகளைக் கொண்ட திருத்தணி நகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பூபதியின் மனைவி சரஸ்வதி 18வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து அதிமுக தரப்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.வேட்புமனு திரும்பப் பெறும் நாளில் கடைசி நேரத்தில் சரஸ்வதியை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திடீரென அவரது மனுவை வாபஸ் பெற்றார்.

இதனால் சரஸ்வதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இவருக்குத்தான் திமுக சார்பில் திருத்தணி நகர்மன்ற தலைவராகும் வாய்ப்பு உள்ளது என்று உடன் பிறப்புகள் இப்போதே இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.https://www.chennaireporters.com/news/dmk-deputy-chairmans-husband-complains-to-collector/

இதையும் படிங்க.!