chennireporters.com

பஞ்சாபில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நான்கு கோடி சொத்துக்கள் பறிமுதல்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 2 பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் கடந்த 16 ஆம் தேதி அன்று வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தினர்.

40 இடங்களில் நடை பெற்ற இந்த சோதனை களில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் பணமும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பணமும் அந்நிய செலாவணி சுமார் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு முக்கிய வி.ஐ.பி ஒருவரின் சொகுசு பங்களா கட்டுவதற்கு கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனை செய்தி தான் பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!