chennireporters.com

வட சென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில் கைது.

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி

25 கொலைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் வட சென்னையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காக்கா தோப்பு பாலாஜி பாண்டிச்சேரியில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காக்கா தோப்பு பாலாஜியின் ஹிஸ்டரி கொஞ்சம் பயங்கரமானது தான் பள்ளியில் படிக்கும் போது வருங்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறாய் என்று ஆசிரியர் கேட்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும்.

டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் என தான் விரும்பும் பதவிகளை சொல்வார்கள்.ஆனால் பள்ளியில் படிக்கும்போதே டீச்சர் கேட்ட கேள்விக்கு பாலாஜியும் டீச்சர் நான் ரவுடி ஆக போறேன் என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

அப்படி சொன்ன பாலாஜிதான் பிற் காலத்தில் வடசென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு பாலாஜி வளர்ந்து ள்ளார்பிராட்வே அருகே உள்ள காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன் வள்ளுவர் நகரை சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் தான் பாலாஜி .

ஒன்பதாவது வகுப்பு வரை படித்த இவர் ஆரம்ப காலத்தில் அடி தடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு சென்றார் காக்கா தோப்பு பகுதியில் பாலாஜியின் உறவினரான துரையை பார்த்தாலே மற்றவர்களுக்கு ஒரு பயம் இருந்தது.

அந்த பயம் தன்னை பார்த்தாலும் வரவேண்டும் என்று கருதினார் பாலாஜி அந்த சமயத்தில் காக்கா தோப்பு பகுதியில் யுவராஜ் மற்றும் இன்பராஜ் என்ற ரவுடிகள் வைத்தது தான் எழுதப்படாத சட்டமாக இருந்தது அவர்களின் நட்பு பாலாஜிக்கு கிடைத்தது.

மூல கொத்தலத்தை சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை கொலை செய்ய இன்பராஜ், யுவராஜ், பாலாஜி ஆகியோர் ஸ்கெட்ச் போட்டார்கள் புஷ்பராஜ் கொலைதான் பாலாஜியின் முதல் கொலை என்கிறார்கள் போலீசார்.

காவல் நிலையங்களில் பாலாஜியின் பெயர் பிரபலமாக தொடங்கியது இதனால் யார் பெரியவன் என்ற போட்டி பாலாஜிக்கும் யுவராஜிக்கும் இடையே ஏற்பட்டது இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த போட்டியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார்.

காக்கா தோப்பு பாலாஜி சிறையில் இருந்தபோது பல ரவுடிகளுடன் காக்கா தோப்பு பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்டது வடச்சென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கா தோப்பு பாலாஜி திட்டமிட்டார்.

அதற்கு தடையாக இருந்தவர்களை அடுத்தடுத்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவரின் கூட்டாளிகள் கொலை செய்தார்கள் யானைக்கவுனி பகுதியை சேர்ந்த தலித் பாலுவுக்கும் காக்கா தோப்பு பாலாஜி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு தலித் பாலுவின் தம்பி சதீஷ் கொலை செய்யப்பட்டார் 2011ஆம் ஆண்டு நடந்த கொலையை இன்னமும் பரபரப்பாக காவல்துறையினர் பேசுவதுண்டு.

பில்லா சுரேஷ் என்பவரை வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கிய காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளிகள் சுரேஷின் மனைவி கண்ணெதிரே தலையை வெட்டிக் கொலை செய்தார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில் ரவுடி விஜய் என்கிற விஜயகுமாரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இந்த இரட்டைக் கொலைகள் வட சென்னை போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

காக்கா தோப்பு பாலாஜியின் பெயரும் பிரபலமானது.காக்கா தோப்பு பாலாஜி செம்மரக்கடத்தல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார் செம்மரக்கடத்தலில் மாதவரத்தில் செம்மர பிசினஸ் செய்பவர்கள் உடன் காக்கா தோப்பு பாலாஜி அறிமுகம் கிடைத்தது.

அதன் பிறகு பாலாஜியின் வளர்ச்சி விஸ்வ ரூபம் எடுத்தது.

அவரின் லைஃப் ஸ்டைலையே மாற்றியது சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலையங்கள் என அனைத்து போலீசாரின் பார்வையும் காக்கா தோப்பு பாலாஜியின் மீது விழுந்தது.

பாலாஜி சிறை செல்வதும் பிறகு வெளியில் வருவதும் காக்கா தோப்பு பாலாஜி வழக்கமாகி விட்டது தமிழகம் முழுவதும் காக்கா தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்குகள் ஆள்கடத்தல் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேடி வந்தார்கள் இந்நிலையில் பாலாஜி முதலில் திருச்சியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சுற்றி வளைத்து கைது செய்ய போலீசார் திட்டம் தீட்டினர் அதை தெரிந்து கொண்ட பாலாஜி கார் மூலம் பாண்டிச்சேரியில் ஒரு இடத்தில் இருப்பதாக தெரிந்தது.

அதன் பின்னர் அங்கு சென்ற சென்னை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்தனர்.

சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இடமும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களும் பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து என பெரும் தொழில் அதிபர்களுடன் மோதியதால் காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் கைது செய்ததாக சொல்லுகிறார்கள் பாலாஜியின் எதிரணியினர்.

இதையும் படிங்க.!