26/11க்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகவும் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்று. தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதல் இந்திய மக்களால் மறக்க முடியாது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அனைத்து பக்கங்களிலும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு பிரபலமான புல்வெளியாகும், பயங்கரவாதம் தாக்கும் வரை, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இது நீண்ட காலமாக ‘ மினி சுவிட்சர்லாந்து’ ஆகும். ஏப்ரல் 22 அன்று, பள்ளத்தாக்கில் விடுமுறைக்குச் சென்ற அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது ஆறு பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
ஓய்வெடுக்கும் மதியமாக இருக்க வேண்டிய நாள் விரைவில் ஒரு துரதிர்ஷ்டவசமான நாளாக மாறியது, 26/11 க்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகவும் கொடிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும். பைசரன் பள்ளத்தாக்கு பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம் – அது எங்கே, அது தாக்குதல்களுக்கு எளிதான இலக்காக மாறியது எது.
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில், பஹல்காம் தெற்கு காஷ்மீரில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலமாகும். இந்த பள்ளத்தாக்கு லிடர் நதியுடன் அனைத்து பக்கங்களிலும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு ‘மேய்ப்பர்களின் பள்ளத்தாக்கு’ என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது பிரபலமான இந்து ஆலயமான அமர்நாத் குகைக் கோயிலின் தாயகமாகும்.
அரு வனவிலங்கு சரணாலயம், அழகிய பீட்டாப் பள்ளத்தாக்கு, துலியன் ஏரி போன்ற பல பிரபலமான சுற்றுலா தலங்களைக் கொண்டிருப்பதால் இது மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலமாகும். பைசரன் பள்ளத்தாக்கு இங்குள்ள மற்றொரு பிரபலமான இடமாகும், இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
பஹல்காம் தாக்குதல் – பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்
பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைசரன் பள்ளத்தாக்கு ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும், மேலும் இங்கு கால்நடையாகவோ அல்லது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் குதிரை குதிரைகள் மூலமாகவோ மட்டுமே அடைய முடியும். எல்லா பக்கங்களிலும் நீண்ட, இருண்ட புல்வெளிகள் மற்றும் அடர்ந்த பைன் காடுகள் இருப்பதால் இது மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. பல மலையேற்றக்காரர்களும் இங்கு முகாமிடுகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 22 அன்று, துப்பாக்கியால் சுடப்பட்ட பயங்கரவாதிகள் குழு ஒன்று, மதியம் 2.45 மணி முதல் 3 மணி வரை காடுகள் வழியாக பள்ளத்தாக்கில் இறங்கி, அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள், மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் இராணுவ சீருடையில் இருந்ததாகவும், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, விருந்தினர்களிடையே பீதியை ஏற்படுத்தியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் சாகசத்திற்காகவே மலையேற்றத்தை மேற்கொள்கின்றனர். இந்தப் பாதையில் எந்த மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் நடந்து அல்லது குதிரைகளில் மட்டுமே இந்த இடத்தை அடைய முடியும். இது இந்த செங்குத்தான பள்ளத்தாக்கை தனிமைப்படுத்துகிறது, குறிப்பாக இந்தத் தாக்குதல் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும் போது.
இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று இதுபோன்ற தாக்குதலுக்கு எவ்வாறு களமாக மாறக்கூடும் என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பைசரன் பள்ளத்தாக்கு காஷ்மீரின் மிகவும் அமைதியான இடங்களில் ஒன்றாகும். பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்து முடிந்தபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, புதன்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நிறுத்தும்வரை இது தொடரும்,” என்று கூறினார். பாகிஸ்தான் தொடர்பாக இதற்குமுன் பல முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்திருந்தாலும் அவை இந்த அளவு கடுமையானவை அல்ல.
“இந்தியா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் ராணுவம், விமானப்படை, கப்பல் படை ஆலோசகர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ஆனால், தூதரக நடவடிக்கைகளை மூடவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை. பாகிஸ்தானில் இருந்து SAARC விசா மூலம் வருபவர்களுக்கான விசாதான் நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் அனைத்து வகையான விசாக்களும் அல்ல” என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ராஜ்ஜீய விவகாரங்களுக்கான ஆசிரியர் சுஹாசினி ஹைதர் எழுதியுள்ளார். இந்த முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா ராணுவ நடவடிக்கையும் எடுக்க வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
“இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பினால், அதற்கு சில வழிகள் உள்ளன. இந்தியா வான் தாக்குதல் நடத்தலாம். 2016ல் நடந்தது போல் சிறப்பு ராணுவ நடவடிக்கைளும் எடுக்கலாம். விமானங்கள் ஆபத்துக்குள்ளாவதை தவிர்க்க ஏவுகணைகளைப் பயன்படுத்த முடிவு செய்யலாம். எல்லையில் போர்நிறுத்தம் முடிவுக்கு வரலாம். குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறிவைத்துப் படுகொலை செய்வதும் நடக்கலாம்,” என்று எழுதியிருக்கிறார் பிரிட்டன் பத்திரிகையான தி எகனாமிஸ்டின் பாதுகாப்புச் செய்திகள் ஆசிரியர் ஷஷாங்க் ஜோஷி. இத்தனை விஷயங்களுக்கும் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தம் பற்றிய செய்திகள்தான் பாகிஸ்தானில் அதிகம் விவாதிக்கப்பட்டன. தன்னிச்சையாக இந்தியா இப்படி முடிவெடுக்க முடியாது என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷாக் தர், பாகிஸ்தானிய ஊடகங்களுடன் பேசும்போது குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிய செய்தித் தொலைக்காட்சியான சமா டிவியில் பேசிய அவர், “முந்தைய அனுபவத்தின்படி இந்தியா இப்படிச் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று யோசித்தோம். நான் இப்போது துருக்கியில் இருக்கிறேன். பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தவிர மற்ற நான்கு விஷயங்களில் இந்தியா எடுத்துள்ள முடிவுக்கு எளிதாகத் தீர்வு காண முடியும்,” என்று கூறினார்.
“ஏற்கெனவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இந்தியா பிடிவாதமாக இருந்து வருகிறது. நீரை நிறுத்திவைக்க சில நீர்த்தேக்கங்களையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் உலக வங்கிக்கும் தொடர்பு இருக்கிறது. அதோடு இந்த ஒப்பந்தம் உறுதியானது. இதில் தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. இப்படிச் செய்தால் உலகில் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தொடங்குவார்கள். ‘வலிமை இருப்பவர்கள் சரியானவர்கள்’ என்பது இங்கே ஒத்து வராது. இந்தியாவிடம் எந்த ஒரு சட்டரீதியான பதிலும் இல்லை. பாகிஸ்தானின் சட்ட அமைச்சகம் இதற்கு பதில் சொல்லும்,” என்றார் அவர். இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அதன்பிறகு இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும்? ஒருவேளை அது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என்றால் இதற்கு ஒரு பயனும் இல்லை என்றுதானே அர்த்தம்.”
“இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இந்தியா அந்த முடிவெடுத்திருந்தாலும் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய நதிகளில் இருந்து வரும் நீரை நிறுத்தத் தேவையான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. ஆனால் சில தீர்க்கமான முடிவுகளை உடனடியாக எடுக்க வேண்டும். நாங்கள் உலக வங்கிக்கு எழுதப்போகிறோம். ஏனெனில் இதற்கு உத்தரவாதம் கொடுத்தது அதுதான்.” என்று டாவ்ன் நியுஸுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதரக அதிகாரி அப்துல் பாசித்.
”இன்றைய சூழலில் உலகில் யாருமே விதிகளைப் பின்பற்றுவதில்லை. சர்வதேச அமைப்புகள் செயல்பட முடியாமல் உள்ளன. இப்படிப்பட்ட சூழலில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில், இந்தியா இப்படி தன்னிச்சையாக முடிவெடுத்தால், பாகிஸ்தான் என்னதான் செய்ய முடியும்?” என்று அப்துல் பாசித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
“இது ஒரு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு வருடமும் மேற்கு நதிகளில் இருந்து 1330 லட்சம் ஏக்கர் அடி நீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரை நிறுத்தும் நிலையில் இப்போது இந்தியா இல்லை என்றே நான் நினைக்கிறேன். நமது ராஜ்ஜீய நடவடிக்கைகளை கொஞ்சம் செயல்படுத்திப் பார்க்கவேண்டும்,” என்று பதிலளித்தார் அப்துல் பாசித். “இந்த நீரை நிறுத்த இந்தியாவுக்கு இதுவரை எந்த உள்கட்டமைப்பும் இல்லை. அதனால் உடனடியாக பெரிய சவால் எதுவும் இல்லை. ஆனால் இந்த நிலைமையைத் தடுக்க நாம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உதாரணமாக சீனா இந்த விஷயத்தில் நமக்கு உதவி செய்ய முடியும்.
சீனாவில் இருந்து பல நதிகள் இந்தியாவுக்குள் வருகின்றன. அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த ஏற்பாடுகள் செய்யலாம். நிறைய வழிகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். விதிகளின்படி நடப்பது வேலை செய்யவில்லை என்றாலும் அதைத் தாண்டி நிறைய வழிகள் உள்ளன. தண்ணீர் நிறுத்தப்பட்டு, வாழ்வா சாவா என்று பிரச்னை வந்தால் ரத்தம் சிந்த வேண்டி வரலாம்,” என்று கூறினார் அப்துல் பாசித்.
“இது ஒரு அசாதாரண நடவடிக்கை. இந்த ஒப்பந்தம் மீறமுடியாதது. இப்படி தன்னிச்சையாக யாரும் முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தை உலக வங்கிக்கும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வோம். நீரைத் திருப்பிவிடுவது இந்தியாவுக்கு எளிதான செயல் அல்ல. அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்,” என்று துனியா டிவிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அஹ்மெர் பிலால் சூஃபி கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஷாஷாத் சௌத்ரியிடம், ”90 சதவிகித பாகிஸ்தானிய விளைபொருட்கள் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம்பியே இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் சார்ந்திருக்கும் நிலையில் இந்தியாவின் முடிவை எப்படிக் கையாள்வது” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
“அத்தனை போர்கள் நடந்தபோதும் இந்த ஒப்பந்தம் மீறப்படவில்லை. ஆனால் இப்போது நடக்கும் விஷயங்கள் எதிர்பார்க்க முடியாதது. என்னதான் இதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தாலும், இது எந்த உடனடி விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை,” என்று ஷாஷாத் சௌத்ரி பதிலளித்தார்.
“பாகிஸ்தான் நதிகளில் நீரே இருக்கப் போவதில்லை என்ற விஷயம் நடக்காது. ஜீலம், செனாப் நதிகளில் அவர்கள் அணை கட்டுவதன் மூலம் ஒரு விளைவை ஏற்படுத்தலாம். அதை அவர்கள் ஏற்கெனவே செய்யவும் செய்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானை பாதிக்கும் அளவு அணையின் கொள்ளளவு இருக்கப்போவதில்லை” என்று அவர் கூறினார்.
“இன்னும் நிறைய விஷயங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஷிம்லா ஒப்பந்தம் என்ன ஆகும்? கராச்சி ஒப்பந்தத்துக்கு என்ன நடக்கும்? எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் போர்நிறுத்தம் அறிவித்திருந்தது என்ன ஆகும்? அணு ஆயுதங்கள் குறித்து பரிமாறிக்கொண்ட தகவல்கள் என்ன செய்யப்படும்? இப்படி எல்லா விஷயத்திலும் கேள்விகள் எழுப்பப்படும்,” என்றார் ஷாஷாத் சௌத்ரி.
“இந்தியா ஒரு அரசியல் முடிவை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு எந்த விளைவும் இருக்கப்போவதில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்த விஷயத்தில் இந்தியா ஏற்கெனவே தயாராக இருந்து வந்தது. ஆனால் இந்தியா இதோடு நிறுத்தி விடாது என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்,” என்கிறார் சௌத்ரி. பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த முக்கிய முடிவுகள். ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரி- வாகா எல்லையை உடனடியாக மூடுதல் என ஐந்து முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானும் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. (ஏப்ரல் 24) பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது. பஹல்காமில் தாக்குதலை தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானது, அநியாயமானது என்றும் மிகவும் பொறுப்பற்றது, அரசியல் ரீதியானது என்றும் அந்த கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்திய அரசின் முடிவை புறக்கணிப்பதாக அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும், எனவே அதுகுறித்து தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரைத் தடுக்கவோ அல்லது திசைதிருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், ஆற்றின் கீழ்ப் பகுதியின் உரிமைகளைப் பறிப்பதும் ஒரு போர்ச் செயலாகக் கருதப்பட்டு, முழு பலத்துடன் பதிலளிக்கப்படும். சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும் உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தும்.
வாகா எல்லையை பாகிஸ்தான் உடனடியாக மூடும். இந்தப் பாதை வழியாக இந்தியாவிலிருந்து அனைத்து எல்லை தாண்டிய போக்குவரத்தும் விதிவிலக்கு இல்லாமல் நிறுத்தப்படும். செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் வாகா எல்லையை கடந்து சென்றவர்கள், ஏப்ரல் 30, 2025க்குள் அப்பாதை வழியாகத் திரும்பலாம். சீக்கிய மத யாத்ரீகர்களைத் தவிர, சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SVES) கீழ் இந்திய நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் பாகிஸ்தான் உடனடியாக ரத்து செய்துள்ளது. SVES இன் கீழ் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீக்கிய யாத்ரீகர்கள் தவிர்த்து, இந்தியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமானபடை ஆலோசகர்களை அனுமதியற்றவர்கள் என்று பாகிஸ்தான் அறிவிக்கிறது. அவர்கள் ஏப்ரல் 30, 2025க்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இந்த ஆலோசகர்களுக்கான உதவி பணியாளர்களும் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக பணியாளர்களின் எண்ணிக்கை 30 அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாகக் குறைக்கப்படும். இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படும், இதில் பாகிஸ்தான் வழியாக எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கும் மேற்கொள்ளப்படும் வர்த்தகமும் அடங்கும். ஆகிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் புதன்கிழமை (ஏப்ரல் 23) அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின், பாகிஸ்தான் நாட்டவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இந்தியாவின் இந்த முடிவுகள் பற்றிப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
அப்போது இந்தியா எடுத்த ஐந்து முக்கிய முடிவுகளை பற்றி அவர் தெரிவித்தார். சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும், அட்டாரி- வாகா எல்லை உடனடியாக மூடப்படும், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து, இந்தியாவில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு, அப்போது அவர், “தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.
அதோடு, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவு, நம்பிக்கை அளிக்கும் விதத்திலும், மாற்றமின்றியும் கைவிடும் வரை இது தொடரும் என விக்ரம் மிஸ்ரி கூறினார். அட்டாரி ஒருங்கிணைந்த எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். உரிய ஆவணங்களுடன் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் வந்தவர்கள் மே 1ஆம் தேதிக்கு முன்னதாக பாகிஸ்தான் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.”
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் மிஸ்ரி விவரித்தார். “பாகிஸ்தான் குடிமக்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இனி இந்தியாவில் பயணிக்க முடியாது. இதற்கு முன்னதாகப் பெற்ற விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். இந்த விசாவின் கீழ் இந்தியாவுக்குள் வந்த அனைவரும் உடனடியாக, 48 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்றார்.
“டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அந்நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் நாட்டை விட்டு வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார். “இதே போன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். இந்த ஆலோசகர்களுக்கான உதவி அதிகாரிகளின் பணியிடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.
“மே 1 ஆம் தேதி முதல் தூதரகங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 55இல் இருந்து 30 ஆக குறைக்கப்படும் எனவும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக்குப் பிறகு, பாதுகாப்புப் படைகள் உஷார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது” எனவும் அவர் கூறினார். “பஹல்காம் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
பிபிசி உருது செய்தியின்படி, பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, இந்தியாவில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்துப் பேசும்போது, இந்தியா நீண்ட காலமாக அதிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் 100 சதவிகிதம் தகுந்த பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
பாலகோட் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் பறந்ததற்காக அபிநந்தன் பிடிபட்டதை இந்தியா நினைவில் வைத்திருக்கும் என அவர் கூறினார். மேலும், “பிரிவினைவாதிகளுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது. பலுசிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன,” என அவர் தெரிவித்துள்ளார்.
“பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாகத் தானே பொறுப்பேற்க வேண்டும்” எனவும், “பஹல்காம் தாக்குதல் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ‘தவறான நடவடிக்கையாக’ இருக்கவும் வாய்ப்புள்ளது” என்றும் அவர் கூறினார். “காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள், அங்கு பல்லாண்டுக் காலமாக இருக்கும் ஏழு லட்சம் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாராவது இந்தியாவிடம் கேட்க வேண்டும்?” என்றும் அவர் பேசினார்.
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோதியை தொலைபேசி வாயிலாக அழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
“அதிபர் டிரம்ப், இந்த தீவிரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், இந்தக் கொடூரமான தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து நிற்கின்றன” என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “காஷ்மீரில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருக்கின்றன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோதிக்கும் இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபமும் உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உஷாவும் நானும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகு மற்றும் அதன் மக்களால் நாங்கள் மெய்மறந்து இருக்கிறோம். இந்தக் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று பதிவிட்டிருந்தார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவொரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் துணை நிற்கும் என்றும் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 130 தீவிரவாதிகள் வரை உள்ளே இருப்பதாக தகவல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.