T12 பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராகதேவன் என்பவர் வக்கீலை மிரட்டி பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆவடி கமிஷனர் சங்கர்.
சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் உண்மையை சொல்லு எவ்வளவு பணம் வாங்கினாய் என்றும் பூந்தமல்லி ஏசிக்கு கூடுதல் பணம் தர வேண்டும் ஏசி ரைட்டர் மகாராஜ கேட்கிறார் என கேட்டு வக்கீலை மிரட்டி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏசி
ஏசி ரவிக்குமார் .
சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் தன்னுடைய செல்ல பிராணி நாய் ராட் வில்லரை நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அப்போது ரோட்டில் நடந்துச்சென்ற இருவரை அந்த நாய் கடித்தத கூறப்படுகிறது.
பூவிருந்தவல்லி சப்-இன்ஸ்பெக்டர் ராகதேவன்.
இது தொடர்பாக பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிய பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 26 ம்தேதி வழக்கு எண் 85/2025 பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சப் – இன்ஸ்பெக்டர் ராகதேவன் சம்பந்தப்பட்ட ரமேஷ் அவரது ஜூனியர் வழக்கறிஞ்சரிடம் இருந்து ரூபாய் 10 ஆயிரம் லஞ்ச பணமாக வாங்கியுள்ளார். இந்த நிலையில் இன்னும் பணம் வேண்டும் எனவும் பூந்தமல்லி ஏசிஅலுவலகத்திற்கு பணம் வழங்க வேண்டும் எனவும் ஏசி அலுவலகத்தில் இருந்து ரைட்டர் மகாராஜா பணம் கேட்பதாகவும் ராகதேவன் வக்கீலிடம் மிரட்டி பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வழக்கில் உண்மைத்தன்மை என்னவென்று விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேடித் தர வேண்டிய இடத்தில் இருக்கும் காக்கி சட்டை அணிந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அதற்கு லஞ்சம் வாங்குவது தவறு.
செல்ல பிராணி ராட் வைலர்.
இருப்பினும் வாங்கிய லஞ்சம் போதவில்லை இன்னும் கொஞ்சம் தர வேண்டும் பூந்தமல்லி ஏசி ரவிக்குமார் ரைட்டர் மகாராஜா என்னிடம் கேள்வி கேட்கிறார் நீ எவ்வளவு பணம் வாங்கினாய் என்பது தெரிய வேண்டும்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
நீ உண்மையை சொல் நீ எவ்வளவு வாங்கினாய் என்பதை உண்மையை சொல் உண்மையை ஒத்துக் கொள் என்று கொலை குற்றவாளியை அடித்து மிரட்டுவதைப் போல தனது கட்சியினரிடம் தன்னுடைய வேலை செய்ததற்கான கட்டணத்தை வாங்கியது எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ராகதேவன் முனைப்பாக இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது?
அப்படி என்றால் தற்போது இருக்கும் ரவிக்குமார் ஏசி எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத ராக தேவன் மாதம் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறோம் எவ்வளவு மொத்த தொகை என்பதை கணக்கு காட்டாத ஏசி ரைட்டர் மகாராஜா மீது தன்னுடைய சந்தேகத்தை எழுப்பாத சப்- இன்ஸ்பெக்டர் ராகதேவன் ஒரு வக்கீலை நோக்கி மீண்டும் மீண்டும் எவ்வளவு பீஸ் வாங்கினீர்கள் என்பதை கேட்பதற்கான காரணம் என்ன யார் அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது என்கின்றனர் பூந்தமல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்?
தற்போது இவர்கள் வாங்கும் அரசு சம்பளம் அதாவது மக்கள் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளம் ஏறக்குறைய அதை வெளிப்படையாக சொன்னால் மக்கள் அரசு ஊழியர்களுக்கு மக்கள் போடும் பிச்சை என்று பொருள் கொள்ள வேண்டும். அப்படி மக்கள் போடும் பிச்சையில் சுகபோகமாக வாழும் அதிகாரிகளு அரசு எல்லாவிதமான வசதிகளை செய்து கொடுத்தும் தங்களுக்கு லஞ்சம் கொடுங்கள் என்று அதிகார பிச்சை கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர்.
எனவே ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சங்கர் அவர்கள் சம்பந்தப்பட்ட ராகதேவன் பூந்தமல்லி ஏசி ரைட்டர் மகாராஜா, பூந்தமல்லி ஏசி ரவிக்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் துணை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்கள் வீட்டின் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் வழக்கறிஞர்கள்.
இது குறித்து பூந்தமல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கௌதம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடரப்போவதாக எங்களிடம் தெரிவித்தார்.
நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவருக்கு எந்தவிதமான நீதி பரிபாலனை வழங்காமல் நாயின் உரிமையாளரிடம் பணம் வாங்கிய இந்த அதிகாரிகள் அவர்களது தரப்பு விளக்கத்தை அறிய நாம் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர்கள் நமது அழைப்பை எடுக்கவில்லை. அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.
பூந்தமல்லி ஏசி ரவிக்குமாரின் பெயரை சொல்லி அவரது ரைட்டர் மகாராஜா பல அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ரவிக்குமாறு அவர்களின் செல்போனுக்கு நாம் தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவரது whatsapp பிற்கு இது குறித்து தங்களது விளக்கம் அறிய வேண்டுகிறோம் என்று செய்தி அனுப்பி இருக்கிறோம். அந்த செய்திக்கு அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
பெண் காவலர்களிடம் அத்துமீறும் கேளம்பாக்கம் ஏ.சி. ரவிக்குமரன்.
https://www.chennaireporters.com/detective/kelambakkam-a-c-trespassing-on-women-guards-ravikumaran/#
கடந்த 2023 ஆம் ஆண்டு பெண் காவலர்களிடம் அத்துமீரும் கேளம்பாக்கம் ஏசி ரவிக்குமார் என்று நாம் ஏற்கனவே நமது சென்னை ரிப்போர்ட்டர்ஸ் டாட் காம் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறோம். அவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது குற்றச்சாட்டுகளுக்கு பேர் போன அதிகாரி அவர்.