chennireporters.com

ஆட்டம் போடும் அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

கர்ப்பிணிகளின் உயிரோடு விளையாடும் டாக்டர்; பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் ஓர் பேரவலம்! அரசு மருத்துவமனையில் ஆபாச விளையாட்டு டாக்டர் கங்காதரன் லீலைகள்!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் ஆபாச ஆட்டம் போட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருப்பது மருத்துவத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுதொடர்பாக பவுஞ்சூர் கிராம மக்கள் சார்பில் ஆறுமுகம் என்பவர் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா, பவுஞ்சூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இந்த மருத்துவமனையில் கங்காதரன் என்பவர் சுமார் 13 ஆண்டுகளாக ஒரே இடத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். ஒரே இடத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்வதாலும், இவரது மாமனார் மறைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ என்று கூறப்படுகிறது. அரசு மருத்துவமனை அருகிலேயே ‘ஜி.கே.ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார் டாக்டர் கங்காதரன் .

குறிப்பாக ஏழை எளிய கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தால் ‘இங்கு ஸ்கேன் கிளியராக இருக்காது. நம்முடைய மருத்துவமனைக்கு வந்துடுங்க’ என கூறி அவர்களை கட்டாயப்படுத்தி  அவருடைய மருத்துவமனைக்கு வரவைப்பார்.

அப்படி வரும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் முதல் பிரசவம் வரை அனைத்தும் யம்முடைய ஆஸ்பிட்டலிலேயே பார்த்துகொள்ளுங்கள் என சொல்லி ஆயிரக்கணக்கில் பில் போட்டு ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார்.

அதேப்போல சுகப்பிரசவம் தன் நடக்கும் என வரும் ஏழை  கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினரிடம் ‘சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லை பெண்ணுக்கு சக்தி இல்லை உடல் பலவீனமாக உள்ளது. அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும்’ என்று அவர்களை குழப்பி மிரட்டி அறுவை சிகிச்சை செய்வார். அதில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இப்படி இவர் செய்த ஆப்பரேசன் அதிகம் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

டாக்டர் கங்காதரன் செயலால் அரசு வழங்கும் இலவச மருத்துவ சேவையை ஏழை மக்கள் பயன்பெற முடியாமலும், தட்டிக் கேட்க தைரியம் இல்லாமலும் தவித்து வருகின்றனர். அதேப்போன்று கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கூறுவது, கருக்கலைப்பது போன்ற சட்டத்துக்கு புறம்பான வேலைகளிலும் இவரது மருத்துவமனை ஈடுபட்டு வருகிறது.

 

கங்காதரன் ஒரு அரசு மருத்துவர் என்கிற அச்சமே இல்லாமல் பல நேரங்களில் மது போதையில் தான் இருப்பாராம். அது தவிற அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களிடம் டபுள் மீனிங்கில் பேசுவது, வாடி.. போடி என்று தான் கூப்பிடுவராம்.

இதில் கொடுமை என்னவென்றால் தனக்குச் சொந்தமான ஜி.கே.ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை தருவது, ஆண் ஊழியர்களின் மனைவிகளை கரெக்ட் செய்யப் போகிறேன் என நாக்கு கூசாமல் பேசி சிரிப்பது இவரது ஹாப்பியாம்.

மேலும் நெருங்கிய நண்பர்களுக்கு தனது மருத்துவமனைக்கு வரவைத்து அவர்களுடன் குடித்து கும்மாளம் அடிப்பாராம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தனது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது மனைவியை கரெக்ட் செய்து காட்டட்டுமா? என்று சவால் விடுத்து டாக்டர் கங்காதரன் பேசிய ஆடியோ வெளியாகி அசிங்கத்தை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு செக்ஸ் பட ரேஞ்சுக்கு இருந்ததாம் அந்த ஆடியோ. கேட்கவே காது கூசும் அளவிற்கு இருக்கிறது அந்த ஆடியோ.

 

அரசு மருத்துவர் என்கிற போர்வையில் ரவுடித்தனம் செய்து வரும் டாக்டர் கங்காதரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் தங்களின் பாதம் தொட்டு மன்றாடி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் கங்காதரன் இந்த புகார் குறித்து அவரை தொடர்பு கொள்ள முயன்றோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!