நெப்போலியனும், அவரது மனைவியும், பெண்வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் சிறப்பாக செய்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.
1991ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நெப்போலியன். அதன் பின் தனது நடிப்பின் திறமையால் 1993-ல் ஹீரோவானார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்து வந்தவர் திடீரென்று நடிப்பிற்கு முழுக்குப்போட்டார்.
அரசியலுக்கு தாவினார். தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டு வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாக வெற்றிப்பெற்றார். பின்னர் பெரம்பலூர் தொகுதியில் நின்று எம்பியானார். பின்னர் மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.
ஆனால் திடீரென்று, தனது குடும்ப நலனுக்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார். அங்கு ஜீவன் டெக்னாலஜீஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், மற்றும் தனுஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் தனுஷூக்கு திருமணம் செய்து வைக்க தீவிரமாக முயற்சி செய்து வந்துள்ளார். இவரது முயற்சி வீண் போகவில்லை. திருநெல்வேலியை அடுத்த மூலக்கரைப்பட்டியைச் சார்ந்தவர் விவேகானந்தர் என்பவரின் மகளுக்கும், தனுஷுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
முன்னதாக இவர்களது நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடந்தது. காரணம் தனுஷால் நீண்ட நேரம் பயணம் செய்ய இயலாததால், அவர் அமெரிக்காவில் இருக்க, நெப்போலியனும், அவரது மனைவியும், பெண்வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தத்தை வீடியோ கால் மூலம் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
தனுஷ் தனது நிச்சயதார்த்தத்தை இன்ஸ்டாகிராமில் இதை உறுதி செய்துள்ளார். பல்வேறு திரை துறையினரும், அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை நடிகர் நெப்போலியன் வழங்கினார்.
தனது மகனின் திருமணத்தை ஜப்பான் நாட்டில் நடத்த நடிகர் நெப்போலியன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அது குறித்து ஜப்பான் நாட்டு தூதரை நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.