chennireporters.com

#PD Jayakumar crores and corrupted; கோடிக்கணக்கில் கொள்ளையடித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தை சீரழித்த பிடி ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி நிர்வாகத்தில் தமிழகத்தையே உலுக்கக்கூடிய செய்தியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 200 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதேபோல கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் சரண்ராஜ் என்பவர் சித்தராஜ கண்டிகையில் ஒரே நாளில் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் கொள்ளை அடித்த பஞ்சாயத்து செயலாளர்  கோபிநாத் குறித்து

வாரி சுருட்டும் பி.டி. ஜெயகுமார்

 தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டருக்கும்  மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், தமிழக முதல்வருக்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த புகார் கடிதத்தில் அனைத்து குற்றங்களுக்கும் ஊழலுக்கும் கொள்ளைக்கும் திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயகுமார் தான் முன்னிலை வகிக்கிறார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்காடுப்பாக்கம், சிருங்காவூர் போன்ற பகுதிகளில் 1500 கம்பெனிகள் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த கம்பெனிகள் அனுமதி இன்றி இயங்குவதற்கு புழல் பிடிஓவாக இருந்த சித்ரா பெர்னாண்டோ அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் செல்வம் மீரான் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு நீதிமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அனுமதி இல்லாமல் இந்த கம்பெனிகள் இயங்குவது குறித்தும் புழல் பிடிஓ சித்ரா பெர்னாண்டோ லஞ்சத்தில் புரண்டு திளைத்து கலெக்டரின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் செயல்பட்டு வந்தார். தற்போது அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பி.டி. ஜெயகுமாருக்கு கமிஷன், கட்டிங், லஞ்சம் கொடுத்தால் நோ ஆக்ஷ்ன்;

இது தொடர்பாக பிடி ஜெயகுமாருக்கு சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர் செல்வம் மீரான் அவர்கள் பல புகார் அளித்திருந்தார். அந்த புகார்கள் மீது இதுவரை பிடி ஜெயகுமார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சித்ரா பெர்னாண்டோவிடமிருந்து  பி.டி. ஜெயகுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக சித்ரா பெர்னாண்டோ தரப்பு பலரிடம் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை பிடி ஜெயகுமார் சம்பந்தப்பட்ட லஞ்சப் பேர்வழி சித்ரா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் அடுத்த  ஈக்காடு  பஞ்சாயத்தில் பல லட்சம் நிதி மோசடி நடைபெற்றுள்ளது. செய்யாத பல வேலைகளுக்கு போலியாக பில் போட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று அதன் பஞ்சாயத்து தலைவர் லாசனா சத்யா, துணைத்தலைவர் குணசேகர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் கூட்டாக ஒருங்கிணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டு பல லட்சம் கொள்ளை அடித்துள்ளனர் என்று 6 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

#P.D. Jayakumar; கலெக்டர் ஆபிசில் மாதம் 20 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் P.D.ஜெயக்குமார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பல புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தினர் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இடம் பாதிக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் நேரடியாக சென்று புகார் அளித்தனர். அவர் சம்பந்தப்பட்ட பஞ்சாத்து தலைவர் லாசனா சத்யா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கு ஆதரவாக திட்ட அலுவலர் ஜெயகுமார், லாசனா சத்யாவின் கணவரிடம் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி.

ஈக்காடு பஞ்சாயத்து நிர்வாகத்தில் பல லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால் ஒரே ஒருமுறை கூட அவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் எருமை மாட்டின் மீது மழை பெய்ததைப்போல இருந்துவிட்டார். எனவே பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும் திட்ட அலுவலர் ஜெயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.  மீண்டும் ஆடிட்டங் செய்து எத்தனை லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கண்டு பிடிக்கவேண்டும் என்கின்றனர் அந்த கிராமத்தினர்.

தலைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டு தனது மனைவியின் கையெழுத்தை தானே பல கோப்புகளில் போடுகிறார் என்று ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்க துப்பில்லாத திட்ட  அலுவலர் ஜெயகுமார் பஞ்சாயத்து தலைவர் போட்ட  பிச்சைக்காசுக்கும், லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு மக்களையும் மற்ற வார்டு பிரதிநிதிகளையும் அவமதித்துள்ளார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

அதேபோல பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தில் எந்த பணிகளும்  செய்யாமல் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்தவரே தலைவராக உள்ளார். அந்த சமூக மக்களின் இடுகாட்டிற்கு சுற்றுசுவரோ அல்லது தகனமேடையோ அமைத்து தரவில்லை. ஆனால் அந்த பஞ்சாயத்து தலைவர் மீது பல புகார்கள் அளித்தும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏறக்குறைய நூறாண்டு காலம் பழமை வாய்ந்த நல்ல தண்ணி கிணற்றை தன்னுடைய அதிகாரத்தால் பாழ்படுத்தி மூடி விட்டார். தற்போது மக்கள் குடி தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருவலாங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ராமாபுரம் பஞ்சாயத்து உட்பட்ட கிராமங்களில் ரங்கபுரம், ராமலிங்கபுரம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் பணிகள் செய்யாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக அந்த பஞ்சாயத்து தலைவர் அமுல் அவர்களின் கணவர் சரவணன் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தலைவர் அமுல் அவர்களின் கணவர் சரவணன்.

அதேபோன்று அதே பஞ்சாயத்தில் உள்ள ரங்காபுரம் ஏரி கால்வாயை விரிவுபடுத்தும் வகையில் பல லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு அணை கட்டியதாக கூறி பொய்யாக போலி பில் போடப்பட்டு பல லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலர் ஜெயகுமாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுமார் 5 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை செக் டேம் கட்டாமல் கொள்ளையடித்து இருக்கிறார். இது போன்ற பல பணிகளில் பல லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவலாங்காடு வட்டாரத்தில் உள்ள பல பஞ்சாயத்துகளில் இது போன்ற பல  கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது .சம்பந்தப்பட்ட  பிடிஒக்கள் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மூல காரணமாக உள்ள திட்ட அலுவலர் ஜெயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் சொத்து கணக்குகளை ஆய்வு செய்து அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

மாவட்ட்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 526 க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. அதன் மீது அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார் அளித்தும் கூட கோடிக்கணக்கில் கொள்ளையடித்து லஞ்சம் வாங்கியதைத் தவிர திட்ட அலுவலர் ஜெயகுமார் வேறு எந்த ஆணியையும் இதுவரை கழட்டவில்லை, பிடுங்கவும் இல்லை என்கின்றனர்.இப்படி நிர்வாக திறனற்ற நிர்வாக திறமை இல்லாத ஜெயகுமார் மக்களின் பணத்தை வீணடித்து மக்களுக்கு பயன்படாத எந்த வேலைகளையும் செய்ய தகுதி இல்லாத ஜெயகுமார். அரசு அதிகாரிகளை நேர்மையாக பணி செய்ய விடாமல் தான் கொள்ளையடிப்பதற்காக ஊழல் அதிகாரிகள் மீது எந்த வித  நடவடிக்கையும் எடுக்காமல் கல்லா கட்டி வருகிறார். பிடி ஜெயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொது மக்கள்.

கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் எஸ்.ஆர் கண்டிகை எனப்படும் சித்த ராஜ கண்டிகை கிராம பஞ்சாயத்தில் ஒரே நாளில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  திடீரென்று ஆய்வுக்குச் சென்ற புதிய கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்ததில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து செயலாளர் கோபிநாத் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு பரிந்துரை செய்தும் உத்தரவிட்டார். உடனடியாக இதை செய்து முடிக்க வேண்டும் என்று பிடி ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார்.

ஃபிராடுதனங்களுக்கு பெயர் போன  பி.டி ஜெயகுமார் பற்றி தெரியாத பிரதாப் கலெக்டர்; 

ஆனால் இதுவரை கடந்த நான்கு மாதமாகியும் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைவிட எந்த உதாரணமும் தேவையில்லை. ஜெயகுமார் ஊழல்வாதி, ஃபிராடு, மாமூல், லஞ்சம் வசூல், கொள்ளை, கமிஷன், கட்டிங் என எல்லா பொருத்தமான சொல்லுக்கும் ஜெயகுமார் பொருந்தக்கூடிய ஊழல் அதிகாரியாகவும், கமிஷன் பெரும் அதிகாரியாகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

எனவே புதிய கலெக்டர் பிரதாப் பி.டி. ஜெயகுமார் மீது அவர் செய்துள்ள ஊழல்கள் பற்றி தனி விசாரணை அதிகாரியை நியமித்து நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தவிர அவர் மீது தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பொதுமக்கள்.

ஊழல் செய்பவர்களை விட  ஊழல் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரி பிடி ஜெயக்குமார் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து பொதுமக்கள்.

இந்த ஊழல்கள் குறித்து கடந்த நான்கு மாதமாக நாம் தொடர்ந்து பிடி ஜெயகுமாரை தொடர்பு கொண்டு உங்கள் மீது பல்வேறு  ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 பஞ்சாயத்துகளிலும், 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பஞ்சாயத்து செயலாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இது குறித்து உங்கள் தரப்பு விளக்கம் தேவைப்படுகிறது என்று பலமுறை அவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவரும் சரி நான் பார்த்துவிட்டு சொல்லுகிறேன் என்று சொன்னவர் இதுவரை அவர் தரப்பு விளக்கத்தை நமக்கு சொல்லவே இல்லை.

அவருக்கு தான் ஓரு  ஐஏஎஸ் அதிகாரி  என்ற நினைப்பு தற்போது வந்திருக்கும் கலெக்டர் இளைஞர் அவருக்கு  அனுபவம் இல்லை. எனவே, நாம் எப்படியாவது சமாளித்து விடலாம் நம்மை மீறி எந்த அதிகாரியும் செயல்பட மாட்டார்கள் என்கிற திமிரும், அதிகார, ஆணவப்போக்கே காரணமாக இருக்கிறது.

இந்த செய்தி குறித்து தற்போதும் பிடி ஜெயகுமார் அவர் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகாலம் அவருடைய சொத்து மதிப்பு குறித்து நீதிமன்றமோ, சிபிஐயோ வழக்கு தொடுக்க எந்த ஆட்சேபனை இல்லை என்று ஆட்சேபனை கடிதம் அளிக்க தயாராக இருக்கிறாரா என அவர் உறுதி அளிக்கவேண்டும் .

இல்லை என்றால் நாம் நீதிமன்றத்தின் மூலமாக சென்று அவருடைய சொத்து குறித்து வழக்கு தொடுக்க தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!