chennireporters.com

வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார் மோகன கிருஷ்ணன்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் (M.H.A.A) வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் இருந்து தனது ஆதரவு வழக்கறிஞர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களுடன் தனது அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் மோகன கிருஷ்ணன் ஊர்வலமாகச் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மேலும் பத்திரிகையாளர்களிடத்தில் வழக்கறிஞர்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!