chennireporters.com

கைது பயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. வழக்கு தொடர ஆளுநர் ரவி ஒப்புதல்.

அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும்,  அது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் பாஜக மாநில தவைவர் அண்ணாமலை எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றனர் உளவுத்துறை அதிகாரிகள்.  

                                             நந்தகுமார் ஐஏஎஸ்.

தமிழக பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது;  சேலம் மாவட்டம் கலெக்டரிடம் பியூஸ் கோயல் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார் அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜன் என்பவர் மீதும் இந்திய தண்டனை சட்டப்படி  வழக்கு தொடரவேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

                                                               ராஜவேல் நாகராஜன்.

இருவேறு சமுதாயங்களுக்கு இடையே மத ரீதியான வெறுப்பை உருவாக்குவது மற்றும்  சதி திட்டம் தீட்டுவது ஆகியவற்றின் கீழ் வடக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார்.  இது குறித்து மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர்  கருத்தை அரசு கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர் அண்ணாமலை பேசிய பேச்சில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் உள்நோக்கம் அதில் இருக்கிறது.

மத்திய அரசு ஷகின் அப்துல்லா தொடர்பான  வழக்கு ஒன்றில் உச்ச நீதி மன்றம் வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசிய வழக்கின் தீர்ப்பு அளித்திருந்தது. அதில் இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ 153 பி 295 550 ஆகிய பிரிவின் கீழ் வருவதாக இருந்தால் யாரும் புகார் செய்யாத நிலையிலும் கூட மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம் என தீர்ப்பு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது என கருத்து தெரிவித்திருந்தார்.

                                                        பியூஸ் மனுஷ்.

மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் சட்ட ரீதியான அனுகு முறையை கையாளலாம் என தெரிவித்திருந்தார்.  அண்ணாமலை பேசிய பேச்சு வெவ்வேறு மதத்தினருக்கு இடையே கசப்பையும், வெறுப்பையும், பகையையும், ஒருமைப்பாடு சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கம் கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த பேச்சுக்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி அண்ணாமலை மீது வழக்கு தொடரலாம் என்று அரசு வழக்கறிஞர் கருத்து தெரிவித்திருந்தார்.  எனவே அந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு தொடரவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் முகாந்தரத்தை ஏற்கலாம் என்றும் குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் 196 ஆம் பிரிவின் கீழ் தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்  என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமர் பிரசாத் ரெட்டியை தொடர்ந்து ஜெயிலுக்கு போகும்  சூழல் அண்ணாமலைக்கு ஏற்படலாம் என்பதால் அண்ணாமலை கைது பயத்தில் இருப்பதாகவும் இந்த வழக்கை சட்ட ரீதியாக அனுக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பாஜக முக்கய நில்வகிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க.!