chennireporters.com

#ram mandir#: காவி கும்பலின் கன்னத்தில் அறைந்த சிறுவன். வைரலாகும் வீடியோ.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒரு சாமியாரிடம் எஸ்.எம். என்கிற இந்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் ராமர் கோயில் திறப்பு பற்றி அவரிடம் கருத்து கேட்கிறார்.

அப்போது இடைமறித்து எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ஆதர்ஷ் ராஜ் என்பவர் ராமர் கோயில் பற்றியும் அதனால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று ஆவேசம் பொங்க பேசுகிறான்.

B. R. Ambedkar - Wikipedia

அது தொடர்பான வீடியோ தற்போது தமிழ்நாட்டில் எல்லா மக்களிடத்திலும் எல்லா அரசியல் கட்சியினரிடமும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலர் தங்களது சமூக வலைதளங்களிலும் youtube தளங்களிலும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

“கோயில் கட்டுனா பிச்சைக்காரங்க தான் அதிகமாவங்க,
மக்களுக்கு ஒரு பயனும் இல்ல..” “கடவுளால எதுவுமே குடுக்க முடியாது,
படிச்சா தான் எனக்கு வேலை கிடைக்கும்..” “கோவிலுக்கு போறத விட பள்ளிக்கு போறது தான் சிறந்தது..” “ராமன் எங்களுக்கு எதுவுமே தரல,
அம்பேத்கர் தான் எங்களுக்கு எல்லாம் கொடுத்தார்..”

மூன்று  நிமிடம் தான் மொத்த ராமர் கடவுள் அறியாமை என அனைத்தையும்  ஒடச்சு விட்டான் தம்பி…

கோயில் கட்டுனா பிச்சைக்காரன் தான் கூடுவான்..

பள்ளிக்கூடம் கட்டுங்கடானு சொல்லி செவுல்லயே அடிச்சிருக்கான் தம்பி..

100 வருட கதையை மூன்று நிமிடத்தில் நொறுக்கி விட்டான் அந்த சிறுவன்.

டிவி சேனலின் ரிப்போட்டர் அந்த சிறுவனிடம் கேட்ட கேள்விக்கும் அதற்கு அந்த சிறுவன் அளித்த பதிலும் உங்களுக்கு அப்படியே மொழி மாற்றம் செய்து எழுதியிருக்கிறோம்.

Importance of education to build a successful career

சிறுவன் பதில்: நான் படிக்கவில்லையென்றால் எனக்கு வேலை எப்படி கிடைக்கும்? கடவுள் எனக்கு வேலை வாங்கித் தரப்போவதில்லை.

செய்தியாளர் கேள்வி: நீ கோயிலுக்குப் போனால் உனக்கு ஆசீர்வாதம் கிடைக்குமே.

சிறுவன் பதில்: நான் கோயிலுக்குப் போகமாட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்குப் போவேன்.

செய்தியாளர் கேள்வி: நீ பெரியவன் ஆன பிறகு என்ன படிக்க ஆசைப்படுகிறாய்?

சிறுவன் பதில்: I A S ( Indian Administrative Service), UPSC தேர்வுகளுக்கு என்னை தயார்படுத்திக்கொள்ளப் போகிறேன்.

செய்தியாளர் கேள்வி: கோயில்கள் முக்கியமானதா இல்லை பள்ளிக்கூடங்கள் முக்கியமானதா?

சிறுவன் பதில்: பள்ளிக்கூடங்கள் தான் முக்கியமானது.

செய்தியாளர் கேள்வி: தினமும் மக்கள் ஒரு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறார்களே.

சிறுவன் பதில்: அவர்கள் முட்டாள்கள். நான் ஆசிரியர்களையும், என் பெற்றோர்களையும் பிரார்த்திக்கிறேன்.

செய்தியாளர் கேள்வி: நீ பிரார்த்திக்கவில்லை என்றால் எப்படி UPSC தேர்வுகளில் வெற்றிபெறுவாய்?

சிறுவன் பதில்: நான் பள்ளிக்குச் சென்று படிப்பதால் மட்டுமே UPSC தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.

Untouchability and Social Distancing. | by Manzoor Athar | Medium

செய்தியாளர் கேள்வி: உனக்கு என்ன வயதாகிறது?

சிறுவன் பதில்: 13 வயதாகிறது.

செய்தியாளர் கேள்வி: நீ எப்படி இவ்வளவு புத்திசாலி ஆனாய்?

சிறுவன் பதில்: நான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதால்.

செய்தியாளர் கேள்வி: நீ பள்ளிக்கூடத்திற்குப் பதில் கோயிலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிறுவன் பதில்: நான் 2-ரூபாய்க்கும், 5-ரூபாய்க்கும் பிச்சை எடுத்திருக்க நேர்ந்திருக்கும். வேறு என்ன நடந்திருக்கும்.?

செய்தியாளர் கேள்வி: தாய் கங்கை அழைப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்

சிறுவன் பதில்: தாய் கங்கை என்ன அவர்களை தொலைப்பேசியில் அழைத்தாரா?

செய்தியாளர் கேள்வி: அப்படியென்றால் நீ கோயிலுக்கே போக மாட்டாயா?

சிறுவன் பதில்:  போகமாட்டேன்

செய்தியாளர் கேள்வி: போனால் தான் என்ன?

சிறுவன் பதில்: கோயிலுக்குச் சென்று என் நேரத்தை வீணடிப்பதை விடப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் புதிதாக ஏதாவது ஒன்றை நான் கற்றுக்கொள்ள முடியும். எங்கள் கிராமத்தில் யாரும் கோயில்களுக்குப் போவதில்லை. ஒரு கோயிலைக் கூட நீங்கள் இங்குக் காண முடியாது.

செய்தியாளர் கேள்வி: உன் சாதி என்ன?

சிறுவன் பதில்: நாங்கள் chamaars(#தலித்) சாதியைச் சேர்ந்தவர்கள்

செய்தியாளர் கேள்வி: நீ அதை மிகப் பெருமையுடன் கூறுகிறாயா?

சிறுவன் பதில்: கண்டிப்பாக, பாபாசாகேப் எங்களுக்கு அந்த உரிமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ராமர் எங்களுக்கு எதையும் தரவில்லை, பாபாசாகேப் தான் எங்களுக்கு அனைத்தையும் தந்திருக்கிறார்.

நல்ல கல்வி ஒரு மனிதனுக்கு என்ன தந்துவிடும்?

நல்ல கல்வி ஒரு மனிதனை நெறிப்படுத்தி அவனுக்கு மகத்தான வாழ்க்கையை கட்டமைத்து தரும், நல்லது எது தீயது எது, சரி எது தவறு எது என்று பகுத்து பார்க்கும் மாண்பைத்தரும், கடவுளின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்திலுருந்து விலகி வாழும் அறிவையும் ஆற்றலையும் ஏற்படுத்தி தரும்.

இதையும் படிங்க.!