chennireporters.com

முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்.

கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் விமான நிலைய படை நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற முப்படைகளின் தளபதி மரணம்.

அவருடன் 14 பேர் பயணம் செய்துள்ளனர்.இந்திய முப்ப டைத்தளபதி பிபின் ராவத் உடன் இறந்தவர்களின் பெயர் பட்டியல் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத்.

பிரிகேடியர் எல்எஸ் லிடர்,

லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்

நாயக் குர்சேவக் சிங்

நாயக் ஜிதேந்திர

குமார் விவேக் குமார்

பி சாய் தேஜா

ஹவ் சத்பால் மற்றும் மேலும் 4 ஹெலிகாப்டர் குழு உறுப்பினர்கள்.விமான ஓட்டுனரில் ஒருவரான கேப்டன் வருண் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். பிபின் ராவத் பற்றிய குறிப்பு.

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார்.ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார்.பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார்.

அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார்.

மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார்.ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார்.

அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.

சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

இதையும் படிங்க.!