chennireporters.com

ரியல் எஸ்டேடின் மலிவான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ இந்த மழைக்காலங்களில் பள்ளமான பகுதிகளில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கும் தெரியாமல் வீடு வாங்கியவர்களுக்கு இயற்கை தன்னுடைய பலத்தை காட்டி இருக்கிறது.

குறிப்பாக தாம்பரம் கூடுவாஞ்சேரி குரோம்பேட்டை பல்லாவரம் பொழிச்சலூர் இரும்புலியூர் போன்ற பகுதிகளில் இதுபோன்ற மலிவான விளம்பரங்களை கண்டு பொதுமக்கள் பலர் வீட்டுமனை வாங்கியும் தனியாக வீடு கட்டியும் தற்போது மழையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த பெரு மழை வெள்ளத்தால் பொதுமக்கள் இனிமேலும் ஏமாற கூடாது என்பதை இயற்கை நமக்கு கற்றுத் தந்த பாடம்.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் வெல்லம் சூழ்ந்துள்ளது.

பள்ளமான பகுதிகளில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி பெரும் நட்டத்தை ஏற்படுத்தும் என்று தெரியாமல் பலரும் இடம் வாங்கி வீடு கட்டி கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

என்பதற்கு இந்த வீடியோவை ஒரு சாட்சி .

தயவு செய்து இனி வரும் காலங்களில் பொது மக்கள் தாங்கள் வாங்கும் இடங்களையும் அடுக்குமாடி குடியிருப்பின் இடங்களையும் ஆய்வு செய்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க.!