chennireporters.com

#Governor’s House Affair; ஆளுநர் மாளிகை விவகாரம்; மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் நிர்மலாதேவிக்கு 28 ஆண்டுகள் சிறை.

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், 5 பிரிவுகளின் கீழ் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்மலா தேவி

பெண் காவலர்களுடன் நிர்மலா தேவி. 

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
MKU scandal: Prof Nirmala Devi sentenced to 10 years in jail
இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நிர்மலா தேவி

நீதிமன்ற வளாகத்தில் பெண் காவலர்களுடன் நிர்மலா தேவி.

2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார். 26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

அதன்படி, பிற்பகல் 1 மணிக்கு  நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார். 

இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் 5 பிரிவுகளின் கீழ் நிர்மலா தேவிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

நிர்மலா தேவி: `மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறை' - நீதிமன்றம் தீர்ப்பு!

இந்திய தண்டனைச்சட்டம் 370-1பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும்,

370-3பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,

5(i)a பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும்,

67 ITP பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,

9 ITP பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனையும், விதித்து தீர்ப்பளித்தார்.  மேலும்

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டதால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும்… மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி பகவதியம்மாள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இந்த தீர்ப்பு குறித்து சமூக வளைதலங்களில் பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழர் விடுதலைக்கழகத்தை சேர்ந்த சௌ. சுந்தர மூர்த்தி என்பவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டையில் பேராசிரியராக பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி அவர்கள் 2018 ஆம் ஆண்டு சக பேராசிரியரான கருப்புசாமி, ஆராய்ச்சி மாணவர் முருகன் ஆகியோரோடு இணைந்து அன்று தமிழகத்தின் உயரிய பொறுப்பில் இருந்த ஒருவருக்கு கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தைகளைச் சொல்லி அவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இன்று அதனுடைய தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பேராசிரியர் நிர்மலா தேவி அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கிறது. சக குற்றவாளிகளான கருப்புசாமி பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் விந்தை என்னவென்றால் யாருக்காக அந்த பெண்களை தயார் செய்தாரோ அவருடைய பெயரும் வரவில்லை, அவருக்கான தண்டனையும் அளிக்கப்படவில்லை. வழக்கில் அவருடைய பெயரே இல்லை. அவர் பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக உதவி பேராசிரியர் முருகன் அவர்களும் கருப்பு சாமியும் இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளனர். என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவேண்டும் என்று  பலர் கருத்து தெரிவுத்து வருகின்றனர். 

இதையும் படிங்க.!