chennireporters.com

காசு,பணம்,துட்டு,மணி,மணி கணவர் மூலம் கல்லா கட்டும் வாணியம்பாடி தாசில்தார் சாந்தி.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் வேலூரை சேர்ந்த சாந்தி. இவர் வாலாஜா வட்டத்தில் வருவாய் ஆய்வாளராகவும். அணைக்கட்டு வட்டத்தில் மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பத்தூர் கலால் தாசில்தாராகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றி கொட்டை போட்டவர் கட்டிங், செட்டிங், பெட்டிங் என எப்படியெல்லாம் கல்லா கட்டவேண்டும் என்று நன்றாக வேலை தெரிந்தவர்.

தாசில்தார் சாந்தி.

இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி என்ற  நோக்கத்தில் மட்டும் தான் வேலை செய்வாராம். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட  பகுதியில் பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தடையில்லா சான்று வழங்க, ஒருங்கிணைந்த சான்றிதழ், விதவை மகள் சான்றிதழ், திருமணம் ஆகாதவர் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஒவ்வொரு சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள்  தாசில்தார் சாந்திக்கு அதாவது அவர் கணவருக்கு மினிமம் ரூ.5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை தண்டம் கட்டவேண்டும்.பட்டா சப் டிவிஷன்,பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வட்டத் தலைமை சர்வே ஆய்வாளரை கொண்டே  லஞ்சம் பெறுவார்.ஏற்கனவே இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றிய சம்பத் என்பவர் ஊழல், லஞ்சம் வாங்குவதாக பல்வேறு செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் மணல் மாஃபியாக்களிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு சற்றும் குறையாதவராக சாந்தி இருந்து வருகிறார். மேலும் தாசில்தார் சாந்தி செய்யும் ஊழல்கள் தில்லு,முல்லு வேலைகள் பற்றிய தகவல் வெளியே கசிந்திட கூடாது என்பதில் கவனமாக இருப்பாராம்.  அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லையாம்.  இதனால் பல்வேறு கோப்புகள் பல மாதங்களாக கையெழுத்து போடாமல் தேங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  வாணியம்பாடி தாலுக்கா ஆபிசில்  தாசில்தார் இருக்கிறாரா?. இல்லையா?. என்று பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் அளவிற்கு இவரது செயல்பாடு இருக்கிறதாம்.  தாசில்தார் இரா.சாந்தியை பொறுத்தவரையில் தாசில்தார் சீட்டில் உட்கார்ந்து எப்பொழுதும் வேலை பார்க்க மாட்டாராம். அப்படி ஏதோ தவறி பணிக்கு வந்தாலும் இரவு 7. மணி முதல் இரவு 9 மணி வரையில் பணி புரிகிறாராம் இந்த நேரம் தான் கட்டிங் வாங்குவதற்கு சரியான நேரம் என்பதால் பெரும்பாலும் தாசில்தார் சாந்தி இந்த நேரத்தில் தான் ஆபிசில் இருப்பாராம். 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாணியம்பாடி தாசில்தாருக்கு  அறிவுறை வழங்க வேண்டும். மற்றும் அரசு செல்போன் எண்ணில் பொது மக்கள் பலமுறை தொடர்பு கொண்டாலும்  அழைப்பை ஏற்காமல் இருப்பது தவறு என்பதையும் விளக்க வேண்டும்.  காசு, மணி, துட்டு, மணி, மணி என்ற நோக்கத்திலே செயல்படும் தாசில்தார் சாந்தி 24 மணி நேரமும் லஞ்சம், லஞ்சம் கொடுத்தால் மட்டும் எந்த வேலையும் சுலபமாக செய்து கொடுப்பார் என அவர் அலுவலக ஊழியர்கள் பேசி வருகின்றனர்.வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டால் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் சாந்தி தனது கணவர் மூலம் லஞ்சம் வாங்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும். தாசில்தார் சாந்தி இதுவரை சம்பாதித்த சொத்தின் மதிப்பு சில, பல கோடிகளை தான்டும் என்கின்றனர் சக ஊழியர்கள். 

தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க.!