chennireporters.com

மோடி மஸ்தான் வித்தை காட்டிய கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது.

கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த ஹாசன் பகுதியில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களாக போலீசுக்கு தண்ணீ காட்டி வந்து தலைமறைவாக இருந்த தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது பலபேர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கடந்த 21 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

அவர் முதலில் வெளிநாடு தப்பிச் செல்ல கூடாது என்று லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் கார் மூலம் வெளிமாநிலம் சென்று விமானம் மூலம் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

மற்றொரு தரப்பில் ஏலகிரி மலையில் தங்கியிருப்பதாகவும் சபரிமலைக்கு மாலை அணிவித்து சென்றிருப்பதாகவும் பல கதைகள் புனையப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.

வீரப்பனையே சுட்டு பிடித்த தமிழக போலீசுக்கு ராஜேந்திர பாலாஜியை பிடிப்பதில் ட
பெரிய சவால் ஏற்பட்டிருக்குமா என்றெல்லாம் கூட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவு செய்திருந்தனர்.

ராஜேந்திர பாலாஜி பட்டன் போன் பயன் படுத்தி வருகிறார்.அதனால் அவர் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பே ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை போலீசார் கண்டு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அவருடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு அவரை தன் வலைக்குள் தானே வந்து விழ வைக்க வேண்டும் என்று போலீசார் திட்டம் தீட்டினார்கள்.

கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த ஆசன் என்ற பகுதியில் காரில் செல்லும்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

டீசர்ட் மற்றும் காவி வேட்டி அணிந்திருந்த ராஜேந்திர சபாலாஜியை கைது செய்த போலீசார் இனோவா காரில் ஏற்றி இன்று விருதுநகர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர் கடந்த காலங்களில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளார்.

பால் கெட்டு விட கூடாது என்பதற்காக ஆய்வு செய்ய பல இயந்திரங்களையும் மேலும் பல முக்கிய பொருட்களை வாங்கியதில் ஊழல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அது தவிர அன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை மிக தரக்குறைவாக பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத ராஜேந்திர பாலாஜி யாருக்காக இவ்வளவு கோடிக்கணக்கான சொத்துக்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி சிலகாலம் போலீசுக்கு தண்ணி காட்டி வந்தார்.

தமிழ போலீசார் நேற்று கையும் களவுமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி பாலில் தண்ணி மட்டும் தான் கலக்க தெரியும் எங்களுக்கு எல்லாமே தெரியும் என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட போலீசார்.

ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள் உ.பி.களும் ரத்தத்தின் ரத்தங்களும்.

இப்போது இவர் மோடியை என்ன சொல்வார்.?

இதையும் படிங்க.!