chennireporters.com

பனை மரம் ஏறி தவறி விழுந்த பேராசிரியர்.

avadi proff
பேராசிரியர் லோகநாதன்

ஆவடி அருகே பேராசிரியர் ஒருவர் மரண மடைந்த செய்தி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா ஊருடங்கால் வேலை இழந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பனைமரம் ஏறி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன்.இவரது மனைவி கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவர்களுக்கு பிரியன் என்ற இரண்டு வயது குழந்தை இருக்கிறது லோகநாதன் ஆவடி அருகே உள்ள கன்னட பாளையம் நாசரேத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி கணித பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு காரணமாக லோகநாதன் வேலை இல்லாமல் வருமானமும் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டார் இதையடுத்து குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் பனைமரத்தில் நேற்று ஏறி நுங்கு வெட்ட முயன்ற போது பனை மரத்தின் உச்சியில் இருந்து லோகநாதன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த லோகநாதன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டி இறந்த தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் அலமாதி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நிறைமாத கர்ப்பிணியாக 2-வயது கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு அரசு உதவ வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!