chennireporters.com

மாற்றுத்திறனாளி முதியவருக்கு சம்பளம் தராமல் ஏமாற்றினாரா டைரக்டர் பாலா?.

சர்ச்சையின் நாயகனாக வலம் வரும் டைரக்டர் பாலா 2009 ஆம் ஆண்டு இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு இதுவரை சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார் நான் கடவுள் படத்தில் நடித்த நடிகர்.

நான் கடவுள் படத்தில் சாமியாராக நடித்திருப்பவர் மாற்றுத்திறனாளி முதியவர் கிருஷ்ணமூர்த்தி.

இவர் இயற்கையிலேயே உருவத்தில் குள்ளமாகவும் இரண்டு கைகள் இல்லாமல் இருந்ததால் இவரை அந்தப் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து ஒப்பந்தம் போட்டனர்.

ஆனால் பலமுறை அவரை சூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்துச் சென்று திருப்பி அனுப்பி உள்ளனர்.

கடைசியாக அவர் நடிக்க வேண்டிய பகுதியை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.  நான் கடவுள் படத்தில் இவர் நடித்த அந்த கதாபாத்திரம் மாஸ்டர் பீஸ் ஆக இருக்கும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

ஆனால் அவர் நடிக்க பணம் சம்பளம் ஒரு லட்ச ரூபாய் தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.  ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு பாலா தரப்பு இதுவரை பணம் தரவில்லையாம் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தியை கேள்விப்பட்டாவது பாலா சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் கிருஷ்ணமூர்த்திக்கு சம்பள பாக்கியத்தை தருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பெரியவர் கிருஷ்ணமூர்த்தயிடம் சினிமாக்காரர்களைப் பற்றி பேசினாலே விரக்தி உச்சத்துக்கே சென்று விடுகிறார்.

சினிமாக்காரர்களை நம்பவே கூடாது என்று கோபம் கொப்பளிக்க சொல்லுகிறார் இரண்டு கைகளும் இல்லாமல் தன் வாழ்க்கையை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படிங்க.!