chennireporters.com

நா கொழுப்பில் மார்க்கெட் இழந்த வடிவேலு.

கவுண்டமணி செந்தில் என இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் இருந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு.

ஒரு கட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம்.அவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகின.
அதுமட்டுமில்லாமல் வடிவேலு காமெடிக்காகவே தியேட்டருக்கு சென்று படம் பார்த்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

அப்படி காமெடியில் ஜாம்பவனாக இருந்த வடிவேலு ஹீரோவாக அறிமுகமான போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் கதைக்கேற்ற ஹீரோவாக இல்லாமல் தனக்கான கதையாக அதை மாற்ற முயற்சி செய்தபோது அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.பட வாய்ப்புகளும் இல்லாமல் தற்போது வீட்டில் இருக்கிறார் வடிவேலு.

வடிவேலுக்கு வசதி வந்தவுடன் நா கொழுப்பும் அதிகமாகி விட்டது என்கிறார்கள் சினிமாத்துறையினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்ரேயாவுடன் குறைந்தது ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் கேட்ட சம்பளத்தை தூக்கி கொடுத்து இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் நடனம் ஆடினார்.ஆனால் அந்த படத்திற்கு பிறகு ஸ்ரேயாவுக் மார்க்கெட் இல்லாமல் தமிழ் சினிமாவில் முடங்கிக் கிடக்கிறார்.

அதனை தொடர்ந்து வடிவேலு நடிப்பில் வெளியான எலி திரைப் படத்திலும் சங்கரின் அந்நியன் படத்தில் நடித்த நடிகையான சதாவையும் ஜோடியாக போடுங்கள் என படக்குழுவினருக்கு கட்டளையிட்டாராம் வாய் கொழுப்பு வடிவேலு அப்போது சதாவுக்கு கொஞ்சம் மார்க்கெட் இருந்த நிலையில் வடிவேலுடன் நடித்த பிறகு இருந்த மார்க்கெட்டும் போய்விட்டது என்று சொல்கிறார்கள் சினிமா உலகத்தினர்.

வடிவேலுடன் நடித்ததால் தான் இவர்களுக்கு மார்க்கெட் போய்விட்டது என்று சொல்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.தற்போது இந்த இரண்டு நடிகைகளுக்கு மட்டுமல்ல பல நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க.!