chennireporters.com

ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த ஹாலிவுட் நடிகர்..!

செக்குடியரசு நாட்டில் ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை வீசி எறிந்த டிவி தொகுக்காளர் கஸ்மா செய்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செக்குடியரசு நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரியும் கமில் பர்டோக் ஷேக் கஸ்மா என்பவர், ஹெலிகாப்டரில் இருந்து  ஒரு மில்லியன் டாலர் பணத்தை கீழே கொட்டினார். இது இந்திய மதிப்பபில் 8¼ கோடி ரூபாய்க்கு சமமாகும். அதாவது 8,34,13,650 ரூபாய் மதிப்பாகும்.கமில் பார்டோஷேக் கஸ்மா லைனை நாட் லேபெம் என்ற  நகரில் வானத்தில் ஹெலிகாப்டரில் பறந்த படி பணத்தை அள்ளி வீசினார். இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் பணமழையில் நனைந்தனர். ஒருகணம் வானில் இருந்து பணம் கொட்டுவதை அறிந்து திகைத்த பொதுமக்கள் மறுகணமே பணத்தை பொறுக்குவதில் போட்டா,போட்டி போட்டு பணத்தை எடுக்க ஆரம்பித்தனர்.

அவர் நடித்த  ஒன் மேன் ஷோ என்ற திரைப்படத்தில் ஒரு குறியீட்டை வைத்து அதை கண்டு பிடிக்கும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்க முடிவு செய்திருந்தார். ஆனால் யாரும் அதை கண்டு பிடிக்கமுடியவில்லை.  ஒரு போட்டியாளரை அதிர்ஷ்டசாலியாக தேர்வு செய்து இந்த தொகையை வழங்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அதற்கான போட்டியில் யாரும் தேர்வாக வில்லையாம்.இதையடுத்து போட்டியில் பதிவு செய்த அனைத்து போட்டியாளர்களுக்கும் பணத்தை வழங்க முடிவு செய்தார். இதனால் போட்டியாளர்களின் இ-மெயில் முகவரிக்கு பணத்தை அள்ளிவீசுவது பற்றிய இடத்தையும், தகவலையும் மறைமுகமாக குறிப்புகளால் மெயில் அனுப்பினார். அதை புரிந்து கொள்ளாதவர்களும், போலி என்று எண்ணியவர்களையும் தவிர மற்றவர்கள் அங்கே கூட்டமாக  கூடியிருந்தனர்.அந்த நேரத்தில் அவர் சொன்னதை உண்மையாக்கி, ஹெலிகாப்டரில் பறந்தபடி பணத்தை வீசினார். இது பற்றிய வீடியோ பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். உலகின் முதல் பணமழை என்று அந்த பதிவுக்கு அவர் பெயரிட்டு இருந்தார். அந்த வீடியோ இணையத்தில்  தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அந்த நிகழ்வில் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.

 

இதையும் படிங்க.!