chennireporters.com

இஸ்ரோ தலைவருக்கு கண்டனம்.

தற்போதைய இசுரோ தலைவனான சோம்னாத்திற்கு கடும் கண்டனம்.அவருக்கு முன் இசுரோ தலைவராக இருந்த தமிழர் சிவன் அவர்கள் மீது சோம்னாத் தரமற்ற குற்றச்சாட்டு. சோம்னாத்தின் இன வெறியே இந்தியாவின் துணை கொண்டு சிவன் அவர்கள் மீது குற்றம்சாட்டுகிறான்.

தனக்கு பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக சிவன் தனக்கு பதவி நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், முறையாக ஆய்வு செய்யாமல் சிவன் தலைமையில்
சந்ரயான் செலுத்தி தோல்வி அடைந்ததாகவும் குற்றம் சாட்டுகிறான் சோம்னாத்.

தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்று கேட்பது இயல்பான ஒன்று.
அதை தனக்கு பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக அப்படி செய்ததாக குற்றம் சாட்டுவது வஞ்சக எண்ணம் கொண்டது.

மேலு‌ம் இது உண்மையா பொய்யா என்பது ஐயத்திற்குறியது. இதற்கு சிவன் அவர்கள் பதில் கூறவில்லை. ஆனால் சிவன் அவர்கள் தலைமையில் அனுப்பிய சந்ரயான் தோல்வி என்பது வெளிப்படையான ஒன்று என்று கூறியுள்ளார்.
ஆய்வு செய்யாமல் அனுப்பினார் என்று கூறுவது வஞ்சக எண்ணம் கொண்டது அயோக்கியத்தனம்.

சோம்னாத் சுயசரிதை யை தீயிட்டு கொளுத்தவேண்டும்.
சோம்நாத் தனது சுயசரிதையில் சிவன் அவர்களை பற்றிய குற்றச்சாட்டை நீக்க வேண்டும்.தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மீது சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு கண்டனங்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!