chennireporters.com

இந்தியன்-2 லைகா விவகாரம் டைரக்டர் ஷங்கர் வேறு படம் இயக்க கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தள்ளி வைப்பு.

இந்தியன் 2 பட விவகாரத்தில், லைகா நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை
மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்- 2 திரைப்படத்தை லைகா பட நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன்-2 படத்தை முடித்து கொடுக்காமல், வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது 236 கோடி ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே சங்கருக்கு 32 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

மீத தொகையை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்ட மிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைகா நிறுவனம் குற்றம் சாட்டிருந்தது.

இவ்வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார்.

ஆனால், அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம்தான் முன் வந்தது படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது.

அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தியது தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும்.

லைகா சார்பில் படப்பிடிப்புக்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது.

இதற்கிடையில் நடிகர் கமலுக்கு ஏற்பட்ட மேக் அப் அலர்ஜி, இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது 2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீண்டித்தது லைகா நிறுவனம்தான் பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல.

வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருக்கிறேன் வரும் அக்டோபர் மாதத்திற்குள் படத்தை முடித்து கொடுக்க தயார்’ என தெரிவிக்கப்பட்டது இந்த வழக்கில் லைகா தரப்பும், இயக்குனர் சங்கர் தரப்பும், தாங்களே சமரசம் செய்துகொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இரு தரப்பினரும் தங்களுக்குள் சமரசம் செய்ய முயற்சித்து அந்த முயற்சி தோல்வி அடைந்தது இந்நிலையில், லைகா நிறுவனம் தாக்கல் செய்திருந்த பிரதான மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்தபோது

இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து நீதிபதி உத்தரவிட்டார் இதை இயக்குனர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, வழக்கின் இடைக்கால கோரிக்கையான, இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டுமென்ற மனு மீதான தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க.!