chennireporters.com

பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த வேண்டும். தி.மு.க எம்.பி. கனிமொழி கோரிக்கை.

பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் நடை பெற்றது.

இதில் தூத்துக்குடி தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார்.

இந்த முகாமில் கனிமொழி பேசுகையில், “குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் தவறிவிட்டனர்.

குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, மனதைப் பாதிக்கும் வகையில் பேசுவது ஆகியவை குற்றமாகும்.

அவ்வாறு பெற்றோர்கள் நடந்து கொண்டாலும், ஆசிரியர்கள் நடந்து கொண்டாலும் அது குற்றம்தான்.

கொரோனாவில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளை தைரியம், தன்னம்பிக்கையுடன், சொந்தக் காலில் நிற்கும் உறுதி உள்ளவர்களாக வளர்ப்பது பெற்றோரின் மிகப்பெரிய கடமையாகும்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதை விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

குழந்தைகளின் திருமணத்தைத் தடுக்க உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர்கள் குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க.!