chennireporters.com

தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்.இந்த சம்பவம் தமிழகத்தையே பதட்டமடைய       வைத்துள்ளது.

மாணவியை கத்தியால் குத்திய இளைஞரும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டானர்.

இதில் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வேதா உயிரிழந்தார்.தற்கொலை செய் முயன்ற ராமச்சந்திரன் சிகிச்சைகாக குரோம்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் இருவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இராமச்சந்திரன் மறைமலைநகரில் தங்கியிருக்கிறார். அவர் திருக்குறளை பகுதியை சேர்ந்தவர்.

ஸ்வேதா மாற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட வருடங்களுக்கு முன்பு குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் வந்து வசித்து வருகிறார்கள். லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.

ராமச்சந்திரன் சுவேதாவை ஒருதலைப்பட்சமாக காதலித்ததாக கூறப்படுகிறது.காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் ஸ்வேதாவை ராமச்சந்திரன் குத்தி கொலை செய்துள்ளார் சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்வேதா இறந்து போனார்.

ஸ்வேதா பற்றி அவரது கல்லூரி மாணவர்கள் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.இது குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!