chennireporters.com

ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்த பாஜக வேட்பாளர்.

கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டில் திமுக சார்பில் அருள்ராஜ் அதிமுக சார்பில் வைத்தியலிங்கம் பாஜக சார்பில் கார்த்திக் தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மொத்தம் 1551 வாக்குகள் உள்ள இந்த குருடம்பாளையம் ஊராட்சியில் 913 வாக்குகள் பதிவாகின.இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் அருள்ராஜ் முன்னிலை பெற்று வந்தார்.

இறுதியாக 387 வாக்குகள் பெற்ற திமுக வேட்பாளர் அருள்ராஜ் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜெயராஜ் என்பவர் 240 வாக்குகளை பெற்றார்.

அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற அதில் மூன்று வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.இதில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் இரண்டு வாக்குகளும் பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கும் பெற்று படுதோல்வி அடைந்தனர்.

கோவை மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவராக இருக்கும் பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் அவரை சேர்த்து மொத்தம் 6 வாக்குகள் உள்ளது.

ஆனால் அவர் குடும்பத்தினர் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.இந்த தேர்தல் முடிவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!