ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தனது எல்லையில் ஒரு லட்சம் படை வீர ர்களை குவித்து தனது பலத்தை காட்டியுள்ளது. இருப்பினும் ஹமாஸ் இமைப்பினர் இஸ்ரேலுக்குள் உடுருவி வருகின்றனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடர்ந்து நடத்திவருகினர். ‘ஆபரேஷன் அல்-அக்ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை இரண்டாவது நாளானா நேற்றும் நீடித்தது. இதில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான உயிர்சேதங்கள் ஏற்பட்டது. இஸ்ரேல் மக்கள் பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது