chennireporters.com

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு தனி விசாரணை குழு அமைக்கவேண்டும். கமல்ஹாசன் கோரிக்கை!

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவை அமைத்து குற்றச்சாட்டுக்களை போர்க்கால அடிப்படையில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பான குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி இன்று அந்த பதட்டம் குறைந்தபாடில்லை.

கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் ஆன்லைன் வகுப்பு போன்ற இணையதள வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்.
போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும் பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைக்கு காது கொடுக்க வேண்டும் அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

குற்றம் இழைத்தவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!