chennireporters.com

# BJP அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் இந்து ராம் பேச்சு.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளரை குறைவான வார்த்தைகளால் பேசி இழிவு படுத்தி வருவதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை கீழ்த்தர கீழ்தரமாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.ஜனவரி 25 அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிர்வகி மு. ஆசிப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் இந்து என் ராம், மூத்த பத்திரிகையாளர்  பன்னீர்செல்வம், மூத்த பத்திரிகையாளர் திருஞானம், நக்கீரன் ஆசிரியர்  கோபால், மின்னம்பலம் இனையதளத்தின் ஆசிரியர் காமராஜ், சென்னை பிரஸ் கிளப் தலைவர் செல்வராஜ் மற்றும் செயலாளர் விமலேஸ்வரன் சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர் குணசேகரன், மூத்த பத்திரிகையாளர் காஃபார், சென்னை ரிப்போட்டர்ஸ்.காம் இனையதளத்தின் இனை ஆசிரியர் தேவேந்திரன்  சத்தியம் தொலைக்காட்சியின் அரவிந்த் ஆக்சன் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் இப்பொழுது டாட் காம் பீர்முகமது தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் பிரபுதாசன் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் மணிமாறன் சங்கர் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சேர்ந்தவர் சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய இந்து குடும்பத்தின் ஆசிரியர் ராம், நான் அத்வானி வாஜ்பாய் அவர்களிடம் பேசி இருக்கிறேன். அவர்களெல்லாம் இப்படி பேச மாட்டார்கள். முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் மரியாதை குறைவாக நடந்து கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் கூட நாம் போராட்டத்தை தொடங்கினால் அவர் அமைதியாகி விடுவார். ஆனால் அண்ணாமலையின் போக்கு கண்டிக்கத்தக்கது. அவர் என்னை பேசியிருந்தால் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பேன்.நியூஸ் 18 ஆசிரியர் கார்த்திகை செல்வன் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுகிறாரா என்று சொல்ல முடியாது அது அவர்தான் முடிவெடுக்க முடியும். ஆனால் நாம் நமது சங்கங்கள் வழக்கறிஞரை சந்தித்து வேறு எப்படி எல்லாம் அண்ணாமலை மீது வழக்கு போடலாம் என்று விவாதித்து கண்டிப்பாக அவர் மீது குற்ற வழக்கை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பேசினார்.

பின்னர் பேசிய இதழியல் போராளி நக்கீரன் கோபால்  எங்களது நக்கீரன் குடும்பம் ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அந்த பரதேசியின் பெயரை இனிமேல் போடக்கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறோம். படத்தைக் கூட நாங்கள் அதாவது முகத்தை மூட முடிவெடுத்து விட்டோம். இதோ பாருங்கள் கடந்த இதழை என்று அவர் கையில் வைத்திருந்த நக்கீரன் இதழை காட்டினார். அது தவிர இணையதளத்திலும் மற்றும் எந்த செய்திகளில் எங்கள் நிறுவனங்களில் வந்தாலும் அதில் ஆட்டுக்குட்டியின் பெயரை பிப் போட சொல்லி முடிவெடுத்து விட்டோம் என்றார் மேலும் தற்போது நம்மையெல்லாம் வெங்காயத்தின் லேயர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் எந்த லேயர் என்று தெரியவில்லை என்று அண்ணாமலையை ஒரு பிடி பிடித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.சென்னை பிரஸ் கிளப் சார்பில் பங்கேற்ற பங்கேற்று பேசிய தலைவர் செல்வராஜ் பத்திரிகையாளர்களை கீழ்த்தரமாக பார்க்கும் போ பார்க்கும் போக்கு நிலவுகிறது. நான் 94-ல் இந்தத் துறைக்கு வந்த போது என்னுடன் அப்பொழுது பணியாற்றிய சாமானிய பத்திரிகையாளர்கள் இன்று முன்னணி செய்தி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளுக்கு உயர்ந்திருக்கின்றனர். பத்திரிகையாளன் என்றைக்கும் பத்திரிகையாளன் தான் கடைசி வரைக்கும் ஆனால் உங்கள் பொருத்தவரையில் இன்றைக்கு இருக்கும் பதவி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து பேச முடியாத அளவுக்கு தாக்குதல் கொடுக்கும் வகையில் தான் காயப்படுத்தும் வகையிலான வார்த்தைகள் பிரயோகங்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.இங்கே கூடி இருக்கும் பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளை ஆதரிக்க கூடியவர்கள் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் தான் ஆனாலும் சகா பத்திரிகையாளரை தரைக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக ஒன்று கூடி இருக்கிறோம். பிரித்தாலும் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகாமல் இதே போல் பத்திரிகையாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் இன்று பேசிவிட்டு நாளை மன்னிப்பு கேட்பது இது ஒன்றும் பிக் பாஸ் வீடு கிடையாது மன்னிச்சிடுங்க பிரதர். பிரதர் சாரி இதையெல்லாம் வேண்டாம் சாரியே சொல்லாதீங்க அதற்கான மரியாதையை போற்றி பத்திரிக்கையாளர் அரவிந்தாக்ஷக்சன் குறிப்பிட்டதை போல் இவருக்கு முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் நல்ல மன நல மருத்துவரை பார்க்கவேண்டும் அது அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் நல்லது. கூட்டம் போட்டு பேசிவிட்டு கலைந்து விடுகிறார்கள் என்றெல்லாம் இனி இது போல் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தி பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். அதன் பிறகு பேசிய மூத்த பத்திரிகையாளர் பன்னீர்செல்வம் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய போராட்டங்களை பலவற்றை நடத்தி இருக்கிறோம். ராஜீவ் காந்திக்கு எதிரான போராட்டத்தை நாம் முன்னெடுத்து போது அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிரான போராட்டமாக பார்க்கப்படவில்லை. ஆனந்த விகடனில் கார்ட்டூன் போட்டதற்காக அதன் ஆசிரியர் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக போராடிய போது அதிமுகவுக்கு எதிரான போராட்டமாக அது சித்தரிக்கப்படவில்லை. சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கட்டும் நக்கீரன் கணேசன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கட்டும் இவை எதற்கும் சுருங்கிய முத்திரை குத்தப்படவில்லை பரந்துபட்ட கருத்துக்கள் என்ற அளவில்தான் இந்த போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.திமுக அதிமுகவை சேர்ந்தவர்களாக இருந்தால் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள் சம்பந்தப்பட்டவர்களை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறீர்கள் ஆனால் பாஜக மட்டும் தான் இதனை ஊக்குவிக்கும் கட்சியாக இருக்கிறது என்பதை பதிவு செய்தார். பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பேசுகையில் இதற்கு முன்னால் யாரும் இப்படி பேசியதில்லை. அவருக்கு எதிராக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது கட்டமைப்பட்ட பொய் யார் எப்பொழுது பத்திரிகையாளர்களுக்கு எதிராக கருத்து சுதந்திரத்திலிருந்து எதிராக நடந்து கொண்டார்களோ அவர் யாராக இருந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் அத்தகைய பாரம்பரியம் இருந்து வருகிறது. இந்த பாரம்பரியத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் அப்போது அப்படி பேசினார்களே ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். நியூஸ்7 நிருபர் தாக்கப்பட்ட விவாகரத்தில் கூட தமிழக அரசின் மெத்தனத்தை போலீசின் அலட்சியத்தை கண்டித்தது போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் தமிழகம் முழுவதும் நாம் நமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறோம்.

இக்கூட்டத்திலும் அதனை கண்டித்து இருக்கிறோம் இதெல்லாம் இவர்களின் கண்களுக்கு தெரியவே தெரியாது தெரிந்தும் தெரியாது போல் பேசுவார்கள் என்றார் சன் நியூஸ் ஆசிரியர் குணசேகரன் பேசுகையில் தமிழகத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. திமுக தரப்பில் யாரேனும் பேட்டி கொடுத்தால் அதனை எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக தரப்பில் மறுத்து மறுபேற்றி கொடுப்பார்கள் எதிர்வினை ஆற்றுவார்கள் இது அரசியல் உரையாடல் பேட்டி கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்களை விட்டு விட்டார்.

அவர் சொன்ன கருத்துக்களின் மீதும் கருத்துக்களை இவர் வைக்கவில்லை அந்த நெறியாளரை விமர்சிக்கிறார் அதுவும் மிக கொச்சையாக விமர்சிக்கிறார். பண்பட்ட அரசியல் உரையாடல் நடந்த தமிழகம் பல்லுப்படாமல் என்ற பதத்தில் யாரும் பேசியதில்லை. பாஜக தலைவர்களை கூட பேசியதில்லை கவன ஈர்ப்புக்கெல்லாம் பேசவில்லை இதன் பின்னரே ஒரு செயல் திட்டம் இருக்கிறது. மன்னிப்பு கூந்தல் எல்லாம் கேட்க முடியாது என்கிறார். எந்த அரசியல் தலைவராவது மன்னிப்பு கூந்தல் என்ற என்று பேசி இருக்கிறார்களா, அப்படி பேசி கேட்டதுண்டா? வாட்ஸ் அப்  வழியாக பேஸ்புக் வழியாக ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தொடங்கும் ஒரு சொல் அதிலிருந்து பயிற்சி எடுத்துப் பேசி இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது. அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க கூடியிருக்கும் பத்திரிகையாளர்கள் பலர் 30 ஆண்டுகாலம் அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் ஒன்றுகூடி நமக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று அவர் யோசிக்க போவதில்லை. இந்த  கும்பல் எனக்கு எதிராக மூன்று முறை போராடி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .தன்னுடைய வட்டார பேச்சு வழக்கு என்கிறார் அதே பகுதியை சேர்ந்தவர் தான் கவர்னராக இருக்கும்  சி.பி.ராதாகிருஷ்ணன் அவர் இப்படி பேசியதில்லை. எடப்பாடி அப்படி பேசியிருக்கிறாரா அல்லது வானதி சீனிவாசன் பேசியிருக்கிறாரா?  அப்படி யாரும் இது வரை பேசியதில்லை. ஏன் என்றால் அது வழக்கம் அல்ல. வேண்டும் என்று பேசிவருகிறார். மாறாக அப்படித்தான் பேசிவேன் என்கிறார். தனக்கு எதிராக போராடியவர்களை பத்திரிகையாளர்களாக பார்க்கவில்லை காலம் பதில் சொல்லும் என்று பேசினார். ஆர்பாட்டத்தில்  பல்வேறு அச்சு மற்றும்  ஊடங்களில் பணியாற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் புகைப்பட கலைஞர்கள் செய்தி வாசிப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் சங்கம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் திரளாக  அணிதிரண்டனர்.  சங்க வேறுபாடுகள் கடந்து பத்திரிகையாளர்களாக ஒன்றிணைந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆர்பாட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவருக்கு எதிராக ஐந்து கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க.!